tamilnadu

img

எழுத்தாளர் கு.சின்னப்பபாரதியை சந்தித்து நலம் விசாரித்தார் கே.பாலகிருஷ்ணன்

நாமக்கல்.மே. 19- நாமக்கல் அருகே கணபதி நகரில் வசித்து வருகின்ற தமிழகத்தின் முது பெரும் முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவரான தோழர் கு.சின்னப்பபாரதி (88) அவர்களை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.  தோழர் கு.சின்னப்பபாரதி மோகனூ ரில் சர்க்கரை ஆலைத் தொழிலா ளர்கள் சங்கத்திற்குத் தலைவராகவும் விவசாயிகள் இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் பி. சீனிவாசராவ் அவர் களுடன் நடைபயண இயக்கத்தில் பங்கு கொண்டு பணியாற்றியுள்ளார். தற்போது உடல் நலம் குன்றி சிகிச்சை பெற்று ஓய்வில் உள்ளார்.  அவரை கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் மே 19 வியாழனன்று நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். நாமக்கல் மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி. முன்னாள் மாவட்டச் செயலாளர் ஏ.ரங்கசாமி.ஈரோடு மாவட்டச் செயலா ளர் ஆர்.ரகுராமன். ஈரோடு மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ.எம்.முனுசாமி மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் சு.சுரேஷ், மாவட்டக்குழு உறுப்பினர் கு.சிவராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.