கோயம்புத்தூர், ஜூலை 25– நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கள் அவையில் பேசக்கூடாது என்பதற்காகவே வார்த்தை களுக்கு தடை விதித்திருக்கி றது மோடி அரசு. நாடாளு மன்ற உறுப்பினர்கள் வெறும் பார்வையாளர்களாகவே இருக்க வேண்டும் என பாஜக நினைக்கிறது என சிபிஎம் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட சிறப்பு பேரவைக் கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. பேரவை கூட்டத்தை துவக்கிவைத்து கே.பால கிருஷ்ணன் பேசியதாவது: மோடி தலைமையிலான பாஜக அரசு வரலாறு காணாத பணவீக்கத்தை, பொருளா தார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனை சுட்டிக் காட்டினால் உலக நாடுகள் இப்படித்தான் நெருக்கடி யை சந்தித்து வருவதாக தனது தோல்வியை மறைக்க அடுத்த நாட்டை அடையா ளம் காட்டுகிறார்கள்
பணவீக்கம் உண்மை யில் 8 சதவிகிதம் என்று சொன்னாலும், உண்மை யில் சில்லரை வணிகத்தோடு ஒப்பிட்டு பார்த்தால் 10 சதவிகிதத்திற்கும் அதிக மாக இருக்கும் என்கிற நிலை உள்ளது. அந்நிய செலா வணி இருப்பு படிப்படியாக குறைந்து கொண்டே போகி றது. இதுபோன்ற ஒரு நிலை தான் இலங்கையில் ஏற்பட்டது. அந்நிய செலாவணி கை யிருப்பு இல்லாததன் காரண மாகத்தான் அந்நாடு டாலரில் வாங்க வேண்டிய பெட்ரோ லியப் பொருட்கள், எரி பொருட்கள் உள்ளிட்ட அத்தி யாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியா மல் தவித்துக் கொண்டிருக்கி றது. கடந்த மூன்று மாதங்க ளாக அங்கு மக்கள் பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதுபோன்ற ஒரு நெருக் கடியை இந்திய நாடும் சந் தித்து வருகிறது. டாலர் கை யிருப்பு படிப்படியாக தேய்ந்து கொண்டே இருக்கிறது. மறு புறம் வேலையின்மை 9 சத விகிதமாக அதிகரித்துள் ளது. விவசாயம் கடும் பாதிப்பை சந்தித்து வருகி றது. மக்களின் வாங்கும் சக்தி யை அதிகரிப்பதற்கு பதி லாக மக்கள் நலத்திட்டங்க ளுக்கான மாநியங்களை வெட்டிச்சுருக்குகிறது. கிரா மப்புற வேலை வாய்ப்பு உறு தித்திட்டம் உள்ளிட்ட திட் டங்களுக்கான நிதியை குறைக்கிறது. இலவசம் தேவையில்லை என பிரதமர் மோடி பேசுகிறார். மாநில அரசுகள் வழங்கும் மானி யங்கள், நிவாரணங்களைக் கூட ஒன்றிய அரசு தலை யிட்டு தடுத்து நிறுத்துகிறது. நாட்டை காப்பாற்ற முடி யுமா என்கிற ஐயம் எழுந்துள்ளது.
நாட்டை பின்னோக்கி இழுக்கிற வேலையை பாஜக அரசு செய்கிறது. ஆனால் அம்பானி, அதானி சொத் துக்களின் மதிப்புகள் மட்டும் ஒவ்வொரு நாளும் அதிக ரித்து வருகிறது. இந்த நெருக் கடி குறித்து பேச அனுமதிப்ப தில்லை. ஜனநாயக உரிமை கள் பறிக்கப்படுகிறது. நாடா ளுமன்றத்தில் எந்தந்த வர்த்தை களை பேசக்கூடாது என்கிற பட்டியல் போடுகிறார்கள். இந்த பட்டியலை பார்த்தால் நாடாளுமன்ற உறுப்பினர் கள் மோடி ஆட்சியில் வெறும் பார்வையாளர்களா கவே இருக்க முடியும். நெருக் கடியில் உழல்கிற மக்களின் மனங்கள் எரிமலையாய் கொதிப்பதை அறிய முடி கிறது. இதனை திசைதிருப் பத்தான் பிரித்தாளும் சூழ்ச்சி யை திட்டமிட்டு பாஜக செய லாக்க முனைகிறது. நாட்டில் எப்போதும் மதக்கலவர சூழல் இருந்து கொண்டே இருப்பதுதான் தனக்கு ஆதா யம் என்று பாஜக நினைக்கி றது. இத்தகைய நிலையில் இருந்து நாட்டை பாதுகாக்க மார்க்சிஸ்ட் கட்சி முன்மொழி யும் இயக்கங்களை வெற்றி கரமாக்கிடவும், அதில் வெகு மக்கள் திரளாக பங்கேற்க வைப்பதிலும் கட்சியின் ஊழி யர்கள் முனைப்போடு செயல் பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.