tamilnadu

img

வர்க்கம், சாதியத்திற்கு எதிராக ஒருசேர போராடுவோம்!

சென்னை, மார்ச் 3 - வர்க்கப் போராட்டத்தையும், சாதியத்திற்கு எதிரான போராட்டத்தை யும் ஒருசேர நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன் கூறினார். கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் எழுதிய ‘சாதி, வர்க்கம், விடுதலை’ என்ற நூலை பாரதி புத்த காலயம் பதிப்பித்துள்ளது. இந்த நூல் வெளியீட்டு விழா புதனன்று (மார்ச் 2) சென்னை புத்தகக்காட் சியில் நடைபெற்றது. நூலை கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன் வெளியிட்டு பேசியதாவது: சாதியம், சாதிய அணுகுமுறை, வர்க்க அரசியல் குறித்த ஆழமான விவாதத்தை நூல் எழுப்புகிறது. களப் போராட்டத்தின் அனுபவப் பகிர்வாக அல்லாமல், ஆய்வு நூலாக பி.சம்பத் எழுதியுள்ளார். சாதியம், அதன் அடிப்படை, தோற்றம், அதை முறியடிப்பது என்பது குறித்து ஏராளமான கருத்துகள் வருகின்றன. சாதியிலிருந்து விடுதலை பெற பெரியார், அம்பேத் கர், மார்க்சிஸ்ட்டுகள் என ஒவ்வொரு வரும் ஒருவழியை கூறுகிறோம். இருந்தாலும், சாதியம் ஒழியவில்லை. நவநாகரீகம், விஞ்ஞானம் வளர்ந் துள்ள சூழலில் கூட, சாதியம் வீழாமல் அதன் வேர்கள் வலுப் பெற்றுக் கொண்டிருக்கின்றன. அதற்கு ஓரளவு விடை கொடுக்கும் வகையில் இந்த நூல் உள்ளது.

கள அனுபவம் என்ன?

சமூக கட்டுமானத்தின் அடிப்படை யான முதலாளி - தொழிலாளி, நிலப்பிரபு - விவசாய தொழிலாளி என்ற வர்க்கப் பிரச்சனை தீர்ந்தால், மேல்கட் டுமானமாக உள்ள சாதியம் ஒழியும் என்பது ஒரு அணுகுமுறை. வர்ணாசிரமத்தால் உருவாக்கப்பட்டுள்ள சாதிய ஏற்றத் தாழ்வு தீர்ந்தால் வர்க்கப் பிரச்சனை தானாகவே ஒழியும் என்று மற்றொரு அணுகுமுறை. இந்த இரண்டு அணுகு முறையும் சாத்தியப்படாமல் உள்ளது. தமிழகத்தில் சாதி ஒரே மாதிரியாக இல்லை. இத்தகைய கட்டமைப்பு ஏன் உருவானது? வடக்கில் வன்னியர், தெற்கில் முக்குலத்தோர், மேற்கில் கொங்கு வேளாளர்கள் அணிதிரளும் சாதிகளாக உள்ளனர். தலித் மக்களில் தென்பகுதியில் பிஎல், வட பகுதியில் பிஆர், மேற்கில் அருந்ததியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். தமிழகத்தை தவிர்த்த மாநிலங்களில், இங்கே உள்ள சாதி அங்கு இல்லை. நிலப்பிரபுத்துவம், இஸ்லாமி யர்கள் ஆட்சி, வெள்ளையர் ஆட்சி என மாறினாலும் சாதியம் ஒழிய வில்லை. நாட்டின் விடுதலைக்குப் பிறகும் அது நீடிக்கிறது. வர்க்கமும், சாதியமும் ஒன்றோடு ஒன்று இணைந் துள்ளது. எனவே, இவை இரண்டையும் எதிர்த்து ஒருசேர போராட வேண்டும் என்பதே கள அனுபவமாக உள்ளது.

மதமாற்றம்தான் தீர்வா?

இந்தியாவில் அவரவர் விரும்பும் மதத்தை பின்பற்றவும், வழிபடவும், மத நம்பிக்கை இல்லாதவர்கள் வாழவும் அரசியலமைப்புச் சட்டம் உரிமை வழங்கியுள்ளது. ஆனால், கர்நாட காவில் பாஜக கட்டாய மதமாற்றச் சட்டம் கொண்டு வந்துள்ளது. தமிழகத் தில் கொண்டு வர வலியுறுத்தி பிரச்சனை செய்கிறது. தனிமனித உரிமையை பறிக்கும் மதத்தில் எதற்கு இருக்க வேண்டும்? தன்னை மனித னாக மதிக்கும் மதத்திற்கு ஒருவர் மாறு வதை தடுக்க முடியாது. மதமாற்றத் தால் மட்டும் பிரச்சனை தீரும் என்று அம்பேத்கர் போல் கூறவில்லை. அது நடைமுறையில் நிறைவேறவில்லை. இந்திய சமூகத்தில் உழைப்பா ளிகள் அடித்தட்டு சாதிகளாக உள்ளனர். உடமை வர்க்கத்தினர் மேல் சாதிகளாக உள்ளனர். இதில் சில மாற்ற ங்கள் நிகழ்ந்திருக்கின்றன. எனவே, கள அனுபவங்களில் இருந்து அடித்தட்டு உழைப்பாளி மக்களை அணி திரட்டுவோம். இந்த நூல் கருத்தி யல் விவாதத்திற்கான, இருள் அகற் றும் அகல் விளக்காக அமைந்துள் ளது. இவ்வாறு அவர் கூறினார்.

களப்போராளிகளின் ஆயுதம்

நூலின் முதல் பிரதியை பெற்றுக் கொண்டு எழுத்தாளர் அ.மார்க்ஸ் பேசுகையில், “தலித் அமைப்புகள் ஒன்றுகூட முடியாத வகையில் பிரிந்து கிடக்கின்றன. உழைக்கும் மக்களின் ஒற்றுமை சிதைந்து கிடக்கிறது. இந்த நிலையில், கம்யூனிச இயக்க ங்கள், அனுபவங்களின் அடிப்படை யில் தலித் மக்களை அணிதிரட்டு கின்றன. இதனால் பின்னடைந்து கொண்டிருந்த தலித் இயக்கங்கள் உயிர் பெற்று செயல்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. களப் போராளிக ளுக்கான ஆயுதமாக இந்த நூல் இருக்கும்” என்றார்.

ஜனநாயக சக்திகள் இணைய வேண்டும்

ஏற்புரையாற்றிய நூலாசிரியர் பி.சம்பத், “இந்தியாவை தவிர நுட்பமான அடக்குமுறை கருவியான சாதி வேறு எந்த நாட்டிலும் இல்லை. சாதியின் பிறப்பும் நுட்பமானது. கருத்தியல் ரீதியாக மட்டும் சாதிக்கு எதிராக போராட முடியாது. சுரண்ட லோடு வலைப்பின்னல் போல் சாதி இணைந்துள்ளது. சாதி ஒழியாமல் உழைப்பாளிகளுக்கு விடுதலை கிடையாது. உழைப்பாளி மக்கள், தேசத்தின் ஒற்றுமைக்கு அச்சுறுத் தலாக மத, சாதி அடைப்பு உள்ளது. இதற்கெதிராக போராட்டத்தை வலுவாக நடத்த வேண்டும்” என்றார். “சாதி ஒழிப்பு என்பது நீண்டகால போராட்டம். ஆனால், தீண்டாமை உட னடியாக ஒழிக்க வேண்டும். சாதிய ஒடுக்கு முறையிலேயே கொடூரமான தீண்டாமை. சாதிய பாகுபாடு என்பதை தாண்டி, தீண்டாமையை தலித் மக்கள் அனுபவித்து வருகின்றனர். தலித் மக்களில் 95 விழுக்காட்டினர் உழைப் பாளிகள். தலித்துகள் என்றால் உழைப் பாளி வர்க்கத்தின் பிரிக்க முடியாத பகுதி. எனவே, தலித் மக்கள் ஒன்றுபடு வார்கள், எழுச்சி பெறுவார்கள். அதில், சாதி கடந்து ஜனநாயக சக்திகள் இணைய வேண்டும். அதனடிப்ப டையில்தான் தலித் மக்களையும், ஜனநாயக சக்திகளையும் திரட்ட தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உருவாக்கப்பட்டுள்ளது. தீண்டாமை ஒழிப்பு போராட்டம் சாதி ஒழிப்பு போரா ட்டத்தின் பிரிக்க முடியாத பகுதி. சாதி ஒழிப்பு போராட்டம், தேச ஒற்றுமை, வர்க்க ஒற்றுமையை பாதுகாக்கும் போராட்டத்தின் ஒரு பகுதி. அதற்கு இந்த நூல் உதவும்” என்றும் அவர் கூறினார். இந்நிகழ்வுக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் கே.சாமு வேல்ராஜ் தலைமை தாங்கினார். சிபிஎம் மாவட்டச் செயலாளர்கள் ஆர்.வேல்முருகன் (தென்சென்னை), கோபால் (திருவள்ளூர்), மாநிலக் குழு உறுப்பினர்கள் ஏ.பாக்கியம், கே.சுவாமிநாதன், பாரதி புத்தகாலய மேலாளர் க.நாகராஜன் மற்றும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத் தலைவர் எஸ்.செல்லப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.