tamilnadu

img

ஆளுநரை பதவி நீக்கம் செய்ய உச்சநீதிமன்றத்தில் வழக்கு

சென்னை, மே 28 - தமிழ்நாடு ஆளுநரை பதவி நீக்கம் செய்ய, முதலமைச்சர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தி யுள்ளார். ‘உழைப்போரெல்லாம் தலை’ எனும் தலைப்பில் மே 27-28 தேதி களில், கேரள சமாஜம் பள்ளி வளா கத்தில், ஓவிய கண்காட்சி நடை பெற்றது. இதனையொட்டி குழந்தை களுக்கான ஓவிய பயிற்சி மற்றும் திரையிடல் நிகழ்வுகள் நடை பெற்றன. மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டக்குழு நடத்திய இந்த கண்காட்சியை ஞாயி றன்று (மே 28) கே.பாலகிருஷ்ணன் பார்வையிட்டார்.

நூல் வெளியீடு

இதனைத் தொடர்ந்து தோழர் பி.சீனிவாசராவ் எழுதி, பரிசல் பதிப்பகம் மறுபதிப்பு செய்துள்ள ‘தலைமறைவு வாழ்க்கையில் எனது அனுபவம்’ நூலை கே.பாலகிருஷ் ணன் வெளியிட்ட, இளந்தோழர்கள் சி.மிருதுளா, கே.மணிகண்டன், ராம் குமார் ஆகியோர் பெற்றுக் கொண்ட னர். காரல் மார்க்சின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கண்காட்சியில், உழைப்பு, ஓய்வு, உழைப்புச்சுரண் டலை வெளிப்படுத்தும் வகையில் ஓவியங்கள் அமைந்திருந்தன. ஓவி யங்களை வரைந்த ஓவியர்களுக்கு கே.பாலகிருஷ்ணன் நினைவு பரிசு வழங்கினார்.

குழந்தை திருமணம்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி,  சட்டவிழுமியங்களுக்கு மாறாக பேசுகிறார். சிதம்பரத்தில் குழந்தை திருமணம் நடைபெறவில்லை. ஆனால், தீட்சிதர்களை அரசு பழி வாங்குகிறது. குழந்தைகளுக்கு இரு விரல் பரிசோதனை நடத்தி யுள்ளது ஒன்று ஆளுநர்  கூறுகிறார். இதுதொடர்பாக அரசு, காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. இதற்கு மாறாக அரசு விளக்கம் அளிக்க வில்லை என்று உண்மைக்கு மாறாக ஆளுநர் கூறுகிறார். சிதம்பரத்தில் ஆய்வு செய்ய டெல்லியிலிருந்து வந்த குழந்தை நல ஆணைய அதி காரி, தனது விசாரணைக்கு பிறகு இருவிரல் பரிசோதனை நடை பெறவில்லை என்று கூறினார். அடுத்தநாள் பேட்டி கொடுக்கும் போது இருவிரல் சோதனை நடந்து ள்ளது என்று முரணாக கூறினார். ஒன்றியஅரசு எந்தளவிற்கு அதிகாரி களை பந்தாடுகிறார்கள் என்பதற்கு இது உதாரணமாக உள்ளது. குழந்தை திருமணம் நடந்தது, காலங் காலமாக தீட்சிதர்கள் குழந்தை திரு மணங்களை நடத்திக் கொண்டு தான் இருக்கிறார்கள். தடைசெய் யப்பட்ட குழந்தை திருமணம் நடத்து கிறவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கிறது. அதை பாராட்டாமல் ஆளுநர் தண்டிக்கி றார்.

சட்டத்திற்கும், உண்மைக்கும் புறம்பாக பேசிக் கொண்டிருக்கிற ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்க பல கட்ட நடவடிக்கைகளை எடுத்துள் ளோம். பல மாநில அரசுகள், தங்கள் மாநில ஆளுநரை நீக்க உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத் திருக்கின்றன. அதுபோல, தமிழக ஆளுநரை பதவி நீக்கம் செய்ய முதலமைச்சர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 3 மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தேசிய மருத்துவ ஆணையம் தடை விதித் துள்ளது குறித்த கேள்விக்கு, “ஆணையத்தின் நடவடிக்கை மிகவும் தவறானது. சிசிடிவி வேலை செய்யவில்லை என்றுகூறி தடை  விதித்துள்ளார்கள். மருத்துவ மனையை ஆய்வு செய்ய இதுதான் அடிப்படையா? இந்தியாவிலேயே தமிழகத்தில் அதிகமான மருத்துவ கல்லூரிகள் உள்ளன. அதில் களங்களைத்தை உருவாக்க, படிக் கெட்டு பாதி உடைந்துள்ளது என்பது  போன்ற காரணங்களை கூறு கிறார்கள். இது அராஜகமானது” என்று பதிலளித்தார். மற்றொரு கேள்விக்கு பதி லளித்த பாலகிருஷ்ணன், “கோவில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள், மடங்கள், அறக்கட்டளை ஆகிய வற்றின் சொத்துக்கள் அரசின் நேரடி  கட்டுப்பாட்டின் கீழ் வர வேண்டும் என்பதுதான் மார்க்சிஸ்ட் கட்சியின் நிலை” என்றார். இந்நிகழ்வுக்கு கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா தலைமை தாங்கினார். திரைக்கலைஞர் ரோகிணி, கட்சியின்  மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.முரளி, கே.முருகன், எஸ்.கே.முருகேஷ், இ.சர்வேசன், பரிசல் செந்தில்நாதன், ஓவியர் கோ.ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.