கிருஷ்ணகிரி, மே 3- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடரும் சாதிய ஆணவக் கொலை களை தடுத்திடவும், கோட்டையூரில் தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்கு தல்களுக்கு நீதி கேட்டும், இதுகுறித்து சிறப்புச் சட்டம் இயற்ற வலியுறுத்தியும், தேன்கனிக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஆர்.சேகர் தலைமையில் புதன் கிழமை (மே 3) ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், மாநிலக் குழு உறுப்பி னர் பி.டில்லிபாபு,மாவட்டச் செயலா ளர் ஜி.கே.நஞ்சுண்டன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:
அதிகரிக்கும் சாதி ஆணவப் படுகொலைகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டம்பட்டியில் காதல் திருமணம் செய்ததற்காக மாமனாரால் கொலை செய்யப்பட்ட ஜெகன், அருண பதியில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதற்காக தந்தை தண்டபாணி யால் கொலை செய்யப்பட்ட மகன் சுபாஷ், தாய் கண்ணம்மா, இதை தடுத்த போது கொலை வெறி தாக்குதலுக்கு ஆளாகி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் மருமகள் அனுசுயா, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஓசூர் வட்டம் பாகலூர் அருகே சூடுகொண்டபள்ளியில் சாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொண் டதற்காக பெங்களூரு மாண்டியா பகு திக்கு கடத்திச் செல்லப்பட்டு கொடூர மாக கொலை செய்யப்பட்ட நந்திஸ் - சுவாதி என கிருஷ்ணகிரியில் தொட ர்ந்து சாதி ஆணவப் படுகொலைகள் அதிகரித்துள்ளன.
கோட்டையூர் சம்பவம்
இது மட்டுமல்ல; கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல கிராமங்களிலும் தீண்டாமைக் கொடுமைகளும் தொடர் ந்து நடக்கின்றன. அஞ்செட்டி வட்டம் கோட்டையூர் கிராமத்தில் பல ஆண்டு களாக புகைந்து கொண்டிருந்த தீண்டாமை வன்கொடுமை தாக்கு தல்கள் உச்சம் அடைந்து ஜின்மநத்தம் கோவில் திருவிழாவில் சாதி ஆதிக்க சக்திகள் வேண்டுமென்றே மோதலை ஏற்படுத்தி தலித் இளைஞர் மரலிங்கா என்பவரின் கையை வெட்டினர். இதற்காக நியாயம் கேட்கச் சென்ற தலித் சமூகத்தை சேர்ந்த 12 பேரை 25 க்கும் மேற்பட்ட சாதி ஆதிக்க நபர்கள் அரிவாள், கத்தி, இரும்பு கம்பி களை கொண்டு கொடூரத் தாக்குதல் நடத்தினர். தாக்கியவர்களை காவல்துறையினர் கைது செய்யா மல் தாக்குதலுக்கு ஆளாகி மருத்துவ மனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வரும் தலித் மக்கள் மீதே வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் கொடு மையாக, தீவிர சிகிச்சையில் இருந்த மரலிங்காவை மருத்துவமனையில் வைத்து கைது செய்து இன்னும் சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் என்ன செய்கிறார்?
மாவட்ட ஆட்சியர் கோட்டையூர் சம்பவம் குறித்து நேரில் ஆய்வு செய்ய வில்லை எனக் கூறப்படுகிறது. தீண்டாமை கொடுமைகள், வன்கொடுமை தாக்குதல்களை நிரந்தரமாக தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதுதானே மாவட்ட ஆட்சியரின் வேலை. இதுகுறித்து முதலமைச்சருக்கு விரிவாக கடிதம் எழுதியுள்ளோம்.
விழுப்புரத்தில் மாநாடு
கோட்டையூர் கலவரத்திற்கு பின்னணியில் பாஜக இருந்துள்ளது என தெரிய வருகிறது. இந்நிலையில் சாதி மத வேறுபாடுகளை கலைந்திட, சாதி ஆணவ படுகொலைகளுக்கு முடிவு கட்டிட நடவடிக்கை எடுக்கும் விதமாக சாதி மதச்சார்பற்ற அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளையும், மதச்சார்பற்ற கட்சிகளையும் திரட்டி மே 16அன்று விழுப்புரத்தில் மாபெரும் மாநாடு நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறினார். ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மாநில செயலாளர் தேன் கு.அன்வர், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செய லாளர் ஜாஹிர் ஆலம், திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் சு.வனவேந்தன் ஆகியோரும் பேசினர். இதில் மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இருதயராஜ், சாம்ராஜ், கோவிந்தசாமி, சுரேஷ்,ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, பிரகாஷ்,மகாலிங்கம், சி.பி.ஜெயராமன், இடைக்கமிட்டி செயலாளர்கள் தேவராஜ், வெங்கடேஷ், ராஜாரெட்டி, சபாபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கெலமங்கலம் ஒன்றிய செயலாளர் ராஜா நன்றி கூறினார்.