பள்ளி மாணவனின் கைகளில் கட்டப்படும் சாதிக்கயிறு குறித்து சிறார் இலக்கியம் பேச வேண்டாமா? என்று சாகித்ய அகாடமி பாலபுரஸ்கார் விருதாளர் எஸ்.பாலபாரதி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் திண்டுக்கல் மாநகர் கிளையின் சார்பாக இலக்கிய சந்திப்பு விழா நடைபெற்றது. இதில் எஸ்.பாலபாரதி பேசியதன் சாராம்சம்:
மிகச் சமீபமாக ஒரு புதிய சிந்தனை பதிவாகிக்கொண்டி ருப்பதை நீங்கள் பார்த்துக்கொண்டி ருப்பீர்கள். சோசியல் மீடியாவில், சார்ட்ஸ் பார்க்கிறவர்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும். இந்தியா முழுவ தும் இந்த குரல் ஒலித்துக்கொண்டி ருக்கிறது. பெண் என்ன ஆடை உடுத்த வேண்டும் என்று போதிப்பதை விட பெண்ணை மதிக்க ஆணுக்கு கற்றுக் கொடுங்கள் என்ற குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. பெண் மரியாதை யாக நடத்தப்பட வேண்டும். அது போல நாம் குழந்தைகள் பக்கம் திரும்ப வேண்டிய தேவை இருக்கிறது. இன்றை க்கு நவீன இலக்கியம் படிக்கக்கூடிய அனேகர்கள் சிறார் இலக்கியத்தை படிப்பதே இல்லை. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இன்றைக்கு மாணவர்கள் கைகளில் கயிறு கட்டி வருகிறார்கள். அந்த கயிறு களின் நுட்பம் எத்தனை பேருக்குத் தெரியும்? அது சாதியக்கயிறு. முன் பெல்லாம் காசிக்கு சென்று வந்தால் கயிறு கட்டுவார்கள். கோவில் திருவிழா விற்கு சென்றால் கயிறு கட்டுவார்கள். இன்றைக்கு சாதியை அடையாளப் படுத்துவதற்காக கயிறு கட்டுகிறார்கள். அந்த அடையாளத்தை வைத்துத்தான் நாங்குனேரியில் ஒரு மாணவரை இன் னொரு மாணவர் வெட்டுகிறார். சாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாரதி யின் பாடலை சொல்லிக்கொடுத்துக் கொண்டி ருக்கிற அதே வேளையில் இன்றைக்கு பள்ளிக்குள் சாதி கயிறு வடிவத்தில் வந்துவிட்டது. சாதியைச் சொல்லி இன்றைக்கு மாணவர்களை பிரிக்கிறார்கள். அந்த மாணவர்கள் இடையேயான சாதி பிரிவினை குறித்து பற்றி சிறார் இலக்கியம் பேச வேண்டாமா? சமூக மாற்றத்திற்காக போராடுகிற நாம் ஒவ்வொருவரும் ஒரு சிறார் நூலை யாவது வாசிக்க வேண்டும். அந்த படைப்பு எப்படி இருக்கிறது என்பதை பற்றி பேசுங்கள் விவாதியுங்கள். தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர் சங்கம் என்று ஒரு சங்கத்தை உருவாக்கி யிருக்கிறோம்.
பள்ளி மாணவர்களுக்கு பத்திரிகை
மிகவும் மகிழ்ச்சியான ஒரு செய்தி. திமுக அரசின் பள்ளிக்கல்வித்துறை யின் சார்பாக தேன்சிட்டு என்று ஒரு பத்திரிகை வெளியிட உள்ளது. 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பதிப்பிக்கிறது. அதே போல் 4,5 பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ஊஞ்சல் என்ற பத்திரிகை, ஆசிரியர்க ளுக்காக கனவு ஆசிரியர் என்ற பத்திரிகை கொண்டு வர உள்ளது. அந்த 3 பத்திரிகைகளுக்கும் பொறுப்பாசி ரியர் நான்தான். இந்த பத்திரிகைகள் எனது கனவு திட்டம். அந்த பத்திரி கைகள் குறித்து ஒரு வடிவமைப்பை கொண்டு வந்துள்ளோம். ஒவ்வொரு குழந்தைக்கும் இலவசமாக போய்க் கொண்டிருக்கிறது. சந்தா செலுத்தியும் பெறலாம். அப்படி பெற்று உங்கள் பிள்ளைகளுக்கும் வாங்கிக்கொடுங் கள். உங்கள் பிள்ளைகளை எழுதச் சொல்லுங்கள். குறிப்பாக கொஞ்ச நேரமாவது வாசிக்க சொல்லுங்க. நமது வீடுகளில் உள்ள செல்போன் களை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு அரை மணி நேரம் வாசிப்பு நேரம் என்று நாம் நேரத்தை ஒதுக்கி வாசிக்க வேண்டும். அப்படி நாம் வாசித்தால் நம் குழந்தைகளும் வாசிக்கும்.