பாஜகவின் வகுப்புவாத அரசியலால் பற்றி எரியும் வடகிழக்கு மாநிலமான மணிப்பூருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தலைமையில், கட்சியின் திரிபுரா மாநிலச் செயலாளர் ஜிதேந்திர சவுத்ரி, அசாம் மாநிலச் செயலாளர் சுப்ரகாஷ் தாலுக்தார், மத்தியக்குழு உறுப்பினர் தேப்லினா ஹேம்ப்ராம் ஆகிய 4 பேர் கொண்ட குழு சென்றது. வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்த அந்தக் குழு, முகாம்களுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து நிவாரண உதவிகளை வழங்கியது.