tamilnadu

ஜெயக்குமார் வழக்கு: காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை, மார்ச் 8 - நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப் பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்கு மார் ஜா மீன் கோரிய மனு குறித்து காவல் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை துரைப்பாக்கத்தில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள்  அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகன் நவீன்குமாருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமாருக்கும் பிரச்சினை இருந்து வந்தது. இந்த விவகாரத்தில், முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம்  மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்ட தாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும மகேஷ் குமார் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட டி.ஜெயக்குமார், ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மார்ச் 11 வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது ஜாமீன் மனுவை செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்த  நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் பதிலளிக்க அவகாசம் கேட்கப்பட்டது. அதேசமயம், ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என புகார்தாரர் மகேஷ்குமார் தரப்பில் இடையீட்டு மனுத்தாக்கல் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இவற்றை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை மார்ச் 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.