இந்திய நாடு நிகழ் காலத்தில் சந்தித்துக் கொண்டிருக் கும் நிகழ்வுப் போக்கு களைக் கவனிக்கும் போது இந்த நாட்டின் பல்வேறு ஆளுமைகளால் முன்னெடுக்கப்பட்ட அறிவுச் செல்வங் களும் அறிவு சார்ந்த விவாதங்களும் சில “கொடூரக் கோமாளி”களின் கைகளில் அகப்பட்டு சிதைந்து, அவை இருந்த சுவடே இல்லாதவாறு அழிந்து போகும் அபாய நிழலில் நாடு சிக் குண்டு கிடப்பதை உணர்த்துகின்றன. அக்காலத்தில் புத்தர், மகாவீரர் போன்ற சான்றோர் பலர் இம்மண்ணில் விதைத்த அன்பின் தத்துவத்தை இந்திய சமூகம் எக்காலத்திலும் தனது ஆதார சுருதியாக நெஞ்சிலேற்றி தற்கா லம் வரையிலும் வந்தடைந்துள்ளது. எல்லா தத்துவங்களுக்கும் மத சிந்த னைகளுக்கும் இந்த மண்ணில் இட மளித்த முறையில் சகிப்புத்தன்மை இந்த மண்ணின் பண்பாக இருந்து வந்துள்ளது. ஆனால் அதையெல்லாம் கேள்விக்குறியாக்கி சகிப்பின்மையும் வெறுப்பும் மனிதமனங்களில் நஞ்சாகக் கலந்து ஆதிக்கம் செலுத்தத் துவங்கி யுள்ளன.
அகிம்சை அடையாளமாக போதிக் கப்பட்ட நாட்டில் கருணையும் அன்பும் தடை செய்யப்பட்டால் கூட ஆச்சரியம் கொள்ள முடியாது என்ற பெருஞ்சோத னைக் காலத்தில், நாட்டை அடிமைப் படுத்தி வைத்திருந்த வெள்ளை ஏகாதி பத்தியதிற்கு எதிராக ஒற்றுமையுடன் நடந்த தியாகம் நிறைந்த போராட்டக் காலத்தின் பெருமை மிகுந்த நினைவு களையும் அத்தகைய போராட்டங் களை வழி நடத்திய தலைவர்களையும் எண்ணிப்பார்க்காமல் இருக்க முடிய வில்லை. அதிலும் குறிப்பாக சுதந்திரப் போராட்டத்தின் கடைசி 35 ஆண்டு காலம், அனைத்துப்பகுதி மக்களும் ஒன்றிணைந்த ஒரு கூர்மையடைந்த மக்கள் எழுச்சியாக சுதந்திரப் போராட் டம் மாறியதையும் அந்த பேரெழுச்சி யின் ஆதார சுருதியாக நாடெங்கிலும் நீக்கமற நிறைந்து நின்ற மகாத்மா காந்தி யையும் நினைவில் கொள்ளாமல் இக்கேடு காலத்தை நாம் எதிர்கொள்ள முடியாது. தனது வித்தியாசமான அணுகு முறையால் சுதந்திரப் போராட்டத்தின் ஒவ்வொரு காலகட்டத்திலும் காந்தி தனி முத்திரை பதித்தார் என்றால் அது மிகையல்ல.
தேசியவாதம்
உலகெங்கிலும் தேசியவாதம் என் னும் சிந்தனை, மக்கள் ஒற்றுமைக்கு சவாலாக இருக்கும் இக்காலகட்டத் திற்கு முரணாக இந்திய மண்ணில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதி ராக தேசியவாதம் என்னும் சிந்த னையை நேர்மறையான ஆயுதமாக மாற்றிய பெருமை காந்திக்கு உண்டு. பொதுவாக தேசியவாதம் என்னும் சிந்தனை ஜாதி, மதம், இனம், மொழி, நிறம், பிரதேசம் முதலானவற்றில் ஏதா வது ஒன்றின் பெயரில்தான் முன்னி றுத்தப்படும். அவ்வாறு முன்னிறுத்தப் படும் தேசியவாதத்தில் ஒரு சாரர் தேசபக்தர்களாக மாறும்அதே நேரத்தில் இயல்பாகவே மற்றொரு சாரர் தேச விரோதிகளாக மாறுவதைத் தவிர்க்க இயலாது. ஒரு மதம் சார்ந்த தேசியவாதம் பேசப்படும் போது அந்த மதம் சாராத மாற்று மதத்தவர்கள் விசேஷமாக எந்த எதிர்நடவடிக்கைகளி லும் ஈடுபடாமலேயே தானாகவே தேசத் துரோகிகளாக மாறிவிடு வார்கள். ஆனால் மகாத்மா காந்தியால் முன்மொழியப்பட்டு நடைமுறைக்கு வந்த தேசியவாதம் என்பது நாட்டின் அனைத்துப் பகுதி மக்களையும் வெள்ளை ஏகாதிபத்தியதிற்கு எதிராக ஒருங்கிணைத்தது. அதோடு, காந்தி முன்னிறுத்திய தேசியவாத சிந்தனை யின் படி ஒருவர் தேச பக்தராக மாறுவ தற்கு, சுதேசிப் பொருட்களை வாங்கு பவராக, வீட்டிலிருந்தபடியே ராட்டை யில் நூல் நூற்பவராக. கதராடை அணிப வராக இருப்பதைத் தவிர பெரிய சாகசங்கள் ஏதும் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. இந்தியத் துணைக்கண்டத்தின் ஒவ்வொரு பகுதி மக்களையும், அவர்களின் தனித்துவ மான அடையாளங்களுக்கு எத்தகைய பாதிப்புமின்றி, வெள்ளை ஏகாதிபத்தி யத்திற்கு எதிரான தேசியவாதம் தனக் குள் இழுத்துக்கொண்டது. நாட்டின் வட பகுதியில் கவிஞர் இக்பாலின் “ஸாரே ஜகான்சே அச்சா...” என்று பாடிய அதே காலகட்டத்தில் தெற்கே “பாருக் குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு” என்ற பாரதியார் பாடலை வெள்ளை ஏகாதிபத்தியதிற்கு எதிராக வீதிகளில் மக்கள் பாடித் திரிந்தார்கள்.
ஜனநாயகம்
ஜனநாயகம் குறித்த மகாத்மா காந்தியின் பார்வையையும் முன்னுதார ணம் கொள்ளத்தகுந்த ஒன்றாகவே கருத வேண்டும். ஜனநாயகம் என்றால் என்ன என்று மாணவர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, “நீங்கள் ஒரு ஓட்டப் பந்த யத்தில் கலந்து கொண்டு முதல் பரிசை வெல்கிறீர்கள் என்று வைத்துக்கொள் வோம். நீங்கள் வென்ற அந்த பந்தயத் தில் உங்களுடன் இன்னும் சிலர் ஓடி னார்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும். நீங்கள் தனிமையில் ஓடி னால் அது பந்தயம் ஆகாது என்பதோடு நீங்கள் வெற்றிபெறவும் முடியாது என்ற பகுத்தறிவுக்கு பெயர் தான் ஜனநாய கம். அதாவது தன்னைக் கணக்கில் கொண்டல்லாது, பிறரின் பால் அதிலும் குறிப்பாக மாற்றுக்கருத்து கொண்ட வர்கள் மீது எடுத்துக் கொள்ளும் அக் கறையும் பரிவுமே ஜனநாயகம் என்ற சொல்லுக்கு பொருளாகக் கொள்ள வேண்டும்” என்ற அவரது பதில், 31% மக்களின் ஆதரவைப் பெற்று அதிகாரத் திற்கு வந்து தலைகால் புரியாமல் ஆட்டம் போடும் இக்கால மன்னாதி மன்னர்கள் ஆழ்ந்து சிந்திக்கவேண்டிய விஷயமாகும். சகோதரத்துவமே ஜன நாயகத்தின் ஆதாரப்புள்ளி என்ற அம்பேத்கரின் கருத்தும் காந்தியின் ஜனநாயகம் குறித்த மேற்கண்ட கருத்தும் மிகத்துல்லியமாக ஒன்றே யாகும். எனவேதான் நாடு சுதந்திரம் அடைந்த போது சுதந்திர இந்தியா விற்குத் தலைமை தாங்க, தன்னுடன் பல்வேறு விஷயங்களில் மாறுபட்ட சிந்தனை கொண்டவரான ஜவஹர் லால் நேருவை ஜனநாயக எண்ணத்து டன் தேர்ந்தெடுத்தார். நாடு பிரிவினை யடைந்த பிறகு 1948 ஜனவரி 13-ஆம் தேதி பாகிஸ்தானுக்குக் கொடுக்க வேண்டிய சுமார் 50 கோடி ரூபாயைக் கொடுக்கா மல் இருந்த இந்திய நிர்வாகத்தை, அந்தப் பணத்தை உடனடியாகக் கொடுக்க வேண்டுமென்று வலியுறுத்தி, தன்னை தேசப்பிதா என்று போற்றும் தனது நாட்டு நிர்வாகத்திற்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தத் துணிந்தார் என்பதோடு அதன்மூலம் சுதந்திர இந்தியாவில் அரசைக் கண்டித்து முதல் போராட்டத்தை நடத்தினார் என்ற பெயரெடுக்கத் சற்றும் தயங்காதது தான் அவர் ஜன நாயகத்தின் மீது கொண்ட நம்பிக்கை யின் வெளிப்பாடாகும்.
ஜனநாயகத்தின் பயன்களை கடைக்கோடி மனிதர்களும் சென்ற டைய வேண்டும் என்பதில் எந்த வித மான தர்க்கத்திற்கும் மகாத்மா காந்தி இடமளிக்கவில்லை. ஒருமுறை காந்தி யைக் காணச் சென்ற கவர்னர் ஜெனரல் மௌண்ட் பேட்டன், அவரைச் சந்திக்க சுமார் ஒருமணிநேரம் காத்திருக்க நேரிட்டது. பிறகு சில கிராமத்து மனிதர் கள் வெளியேறியதும் மௌண்ட் பேட்டன் காந்தியை சந்தித்தார்.அப்போது, தான் அந்த கிராமத்து மனி தர்களின் பொருட்டு காந்தியைச் சந்திக்க காத்திருக்க நேர்ந்ததன் பொருட்டு அதிருப்தியை, “காந்தி அவர்களே! நான் இந்த நாட்டின் கவர்னர் ஜெனரல் என்பதை நீங்கள் மறந்து விட்டீர்கள்” என்ற ரீதியில் மௌண்ட் பேட்டன் வெளிப்படுத்தினார். அதற்கு காந்தி, “நீங்கள் இந்நாட்டின் கவர்னர் ஜெனரலாக இருக்கலாம். ஆனால் இந்த நாடு அவர்களுடையது ஆயிற்றே?” என்று அந்த கிராமத்து மனி தர்களைக் குறிப்பிட்டு மௌண்ட் பேட்டனுக்குக் கூறிய பதிலிலிருந்து ஜனநாயகம் என்ற நடைமுறையில் மக்க ளுக்கு இருக்கும் தவிர்க்க இயலாத முக்கிய பங்கு குறித்த மகாத்மா காந்தியின் மதிப்பீடு வெளிப்படுகிறது.
சட்டம் மறுப்பதற்கே!
சட்டமறுப்பு இயக்கம் குறித்து அன்னிபெசன்ட் அம்மையாருக்கும் மகாத்மா காந்திக்கும் நடந்த விவா தங்கள், சட்டங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் எனபதைத் தெளிவு படுத்தும் ஒன்றாகும். “சட்டங்கள் மதிக்கப்பட வேண்டியவை. எக்காரணம் கொண்டும் சட்டங்கள் மீறப்படக்கூடாது” என்று வாதிட்டுக் கொண்டிருந்த அன்னி பெசன்ட் அம்மையாருக்கு ”சட்டங்கள் கண்டிப்பாக மீறப்பட வேண்டியவை” என்று அதிரடியாக பதிலளித்தார். அதைக்கேட்டு திகைப்படைந்த அன்னி பெசண்டுக்கு, “சட்டங்கள் நீதியற்றவை யாக இருக்குமேயானால் அவை நிச்ச யம் மீறப்பட்டே ஆகவேண்டும். நீதிக்குப் புறம்பான சட்டங்கள் தேவை யற்றவை” என்று அதற்கான காரண மாக விளக்கி நிலைகுலையச்செய்தார். இது, சட்டங்கள் அனைத்தும் புனித மானவை என்று இக்காலத்திலும் கூட வாதம் செய்து வருபவர்களையும் நடை முறைக்கு உதவாத நீதிக்கு புறம்பான சட்டங்களை கண்மூடித்தனமாக எளிய மக்கள் மீது நடைமுறைப் படுத்துபவர் களையும் எண்ணெய் சட்டியிலிட்டு வறுத்து எடுப்பதைப் போன்ற கருத்தா கும், என்பதோடு தற்கால காவல் துறை, நீதித்துறை ஆகியவற்றுக்கு மிக மிக பொருத்தமான ஒன்று என்பதை யாரும் மறுக்க இயலாது. தான் கொண்டிருக்கும் கருத்துக் கள் நடைமுறை அனுபவங்கள் மூலம் தவறு என்று உணர நேரிட்டால் அவற்றை திருத்தத் தயங்காத பண்பு மகாத்மா காந்தியை உண்மையான மகாத்மா என்ற தகுதிக்கு உயர்வ டையச் செய்யும் ஒன்றாகும்.
1930 கள் வரையிலும் மதங்கள் குறித்த காந்தியின் கருத்து நேரு உட்பட பலராலும் ஏற்றுக்கொள்ளத் தக்க தாக இருக்கவில்லை. “அரசியலில் இருந்து மதத்தை வேறுபடுத்தக் கூடாது. ஏனெனில் மதம் அரசியலின் ஆத்மா போன்று செயல்படும்” என்ற கருத்தையே கொண்டிருந்தார். தங்களுக் கென்று மத அடிப்படையிலான நாடு வேண்டும் சாவர்க்கரும் ஜின்னா வும் இந்து மற்றும் முஸ்லிம் நாடு களுக்கான கோரிக்கையின் மூலம் நாட்டின் பிரிவினைக்கு வித்திட்ட போது தான் நடைமுறையில் மதம் அரசிய லுடன் கலக்கும் போது ஏற்படும் விளை வுகள் என்ன என்பதை உணர்ந்தார். எனவே தான் 1940-களில், “எனது உயிர் இருக்கும் வரை அரசியலில் மதத்தைக் கலக்க ஒருபோதும் அனும திக்க மாட்டேன்” என்று தனது நிலை பாட்டைத் திருத்தினார். அதோடு மத ரீதியான மோதல்கள் நடந்த நேரங்க ளில் எல்லாம் மக்கள் ஒற்றுமை என்ற சிந்தனையை உயர்த்திப்பிடிக்கவும் செய்தார். 1943- ஆம்ஆண்டு ஜூலை யில் இங்கிலாந்து உள்துறை செயலாள ருக்கு எழுதிய கடிதம் ஒன்றில்,”மதம் என்பது ஒருவரின் தனிப்பட்ட பிரச் சனை, அது எக்காரணம் கொண்டும் அரசியல் விஷயங்களில் கலக்கக்கூ கூடாது” என்று எழுதுகிறார். பாகிஸ் தானுக்குக் கொடுக்க வேண்டிய பங்குப் பணத்தைக் கொடுக்க வலியுயிறுத்தி, சுதந்திர இந்தியாவில் காந்தியால் நடத்தப்பட்ட முதல் போராட்டத்தின் இன்னொரு கோரிக்கை டெல்லியில் இந்து மகா சபையினர் கைப்பற்றிய மசூதிகளை மீண்டும் இஸ்லாமிய ருக்கே திருப்பிக் கொடுக்கவேண்டும் என்பதாகும். ஆர்எஸ்எஸ் காந்தியை ஏன் கொன்றது என்பதற்கு இதைவிட வேறு காரணம் ஏதும் வேண்டுமா?
காந்தியை எச்சரித்த தாகூர்
சுதந்திரப் போராட்டத்தை வலுப்படுத்தி, அதைக் கூர்மையடையச் செய்யும் நோக்கில் காந்தியால் தேசிய வாதம் முன்னெடுக்கப்பட்ட போது, இரவீந்திரநாத் தாகூர் தனது “தேசிய வாதம்” என்னும் கட்டுரை மூலம் ‘தேசிய வாதம் நாசகரமானது. மனிதநேயத்தை விட மேலான இடத்தைப்பெற்று வெற்றி யடைய தேசியவாதத்தை ஒருபோதும் நான் அனுமதிக்கமாட்டேன். என்ன பெய ரிலான தேசியவாதமாக இருந்தாலும் அது மிகவும் அபாயகரமானது’ என்ற காந்தியை எச்சரிக்கை செய்யவே செய் தார். எப்படியாவது சுதந்திரப் போராட் டத்தை வலுப்பெறச் செய்யவேண்டும் என்ற குறிக்கோளில் மட்டும் கவனம் செலுத்திய காந்தி, காலப்போக்கில் தேசியவாதம் மெல்ல மெல்ல ஆர்எஸ்எஸ் கும்பலின் சூழ்ச்சிகளால் பிராமணீய ஆதிக்கம் மேலோங்கப் பெற்று ஆபத்தான தீய குணத்தை அடை யும் அறிகுறிகளைக் கண்டுணர்ந்தார். நாடு சுதந்திரம் அடையும் காலகட்டத் தில் மகாத்மா காந்தி தேசியவாதச் சிந்த னையை மறுபரிசீலனை செய்ததன் மூலம் அதை எதிர்க்கவும் துணிந்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு “யூத தேசியம்” என்ற யூதர்களுக் கான தனி நாடு அமையும் சிந்தனைக்கு முற்போக்கு சர்வதேசியச் சிந்தனை கொண்டவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித் தார்கள். யூத தேசிய அடிப்படையில் உருவாகும் இஸ்ரேல் நாட்டுக்கு தலை வராகும் படி அழைப்பு விடுக்கப்பட்ட விஞ்ஞான மாமேதை ஆல்பர்ட் ஐன்ஸ் டீன், அந்த அழைப்பை நிராகரித்தார். அமரத்துவம் பெற்ற மகா கலைஞன் சார்லி சாப்ளின் உள்ளிட்ட ஏராள மானோர் இஸ்ரேல் என்னும் யூத தேசிய அடிப்படையில் அமையும் நாட்டுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். அந்த வகையில் ஜவஹர்லால் நேரு, “நாம் யூத தேசியம் என்னும் சிந்தனையின் அடிப்படையில் ஒரு நித்திய நரகத்தை திறக்கிறோம்” என்று கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதத்தி லான கருத்துக்களை தொடர்ந்து தெரி வித்து வந்த போது மகாத்மா காந்தியும் நேருவுடன் ஒத்தகருத்தையே கொண்டி ருந்தார். தற்காலத்தில் அது எப்படிப்பட்ட ‘நரகம்’என்று நாம் கண்கூடாகப் பார்க்கிறோ மல்லவா?
அனைத்து விதத்திலும் ஆர்எஸ்எஸ் என்னும் இந்து தேசியவாதத்திற்கு தடுப்பரணாக மாறிவரும் மகாத்மா காந்தியை அழித்தொழித்து அதன் மூலம் இஸ்லாமியர்களுக்கு எதிரான ஒரு மாபெரும் மதக் கலவரத்தை இத்தகைய பின்னணியில் தான் சங்பரிவார் திட்டமிடுகிறது. சாவர்க்கர் தலைமையில் கோட்சே, நாராயண் ஆப்தே உள்ளிட்டோர் அடங்கிய குழு 1948 ஜனவரி - 20 அன்று நடந்த ஒத்திகைக்குப் பிறகு காந்தியைச் சுட்டு கொல்ல 1948 ஜனவரி - 30 என்ற நாள் குறிக்கப்பட்டது. ஜனவரி 30 என்ற நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது கூடத் தற்செயலானது அல்ல. நன்கு திட்டமிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் விசேஷமான நாள். ஏனெனில் 1933 ஜனவரி 30 என்ற அந்த நாளில் தான் ஜெர்மனியின் சேன்ஸ்ல ராக ஹிட்லர் என்னும் வரலாற்றின் குப்பைக் கூடைக்குள் வீசி எறியப்பட்ட மாபாதகன் பதவியேற்றுக் கொண்ட நாள். காந்தி சுட்டு வீழ்த்தப்பட்டு சுமார் 74 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட காந்தி யின் உருவப் பொம்மையைச் செய்து, அதில் துப்பாக்கியால் சுட்டு சிவப்பு மையைக் கொட்டி ‘மகாத்மா’ கோட்சே வுக்கு வெற்றி முழக்கமிட்டு ஒரு கும்பல் கொக்கரிக்கிறது எனில் அவர் களுக்கு இன்னும் மிக வலிமையாகவும் ஆழமாகவும் மகாத்மா காந்தியின் சிந்தனைகள் இந்த மண்ணில் வேர் விட்டுள்ளது என்பதையே உணர்த்துகிறது. எப்பாடு பட்டேனும் மகாத்மா காந்தி உயர்த்திப் பிடித்த மனிதநேயத்தைப் உயர்த்திப் பிடிப்பதன் வாயிலாக பாசிசத்தை வேரறுக்கும் போராட்டத்தை முன்னெ டுக்க வேண்டியது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொள்ளும் ஒவ்வொரு வரின் வரலாற்றுக் கடமையாகும்.