tamilnadu

img

மொழிப்போர் தியாகிகள் நினைவிடம் திறப்பு

சென்னை,ஜன.25- மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராசன் நினைவிடத் தைத் திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். ஜனவரி 25 அன்று மொழிப்போர் தியாகிகள் நாள்  அனுசரிக்கப்படுகிறது. தமிழ் மொழி உரிமைகளுக்காகப் போராடி உயிர் நீத்த தியாகிகளுக்கு  அஞ்சலி செலுத்தப்படுகிறது. இந்நிலையில், மொழிப்போர் தியாகிகள் மற்றும் வீர வணக்க நாளையொட்டி மொழிப்போர் தியாகிகளின் திருவுரு வப் படங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஜன. 25) மரியாதை செலுத்தினார். மேலும், சென்னை கொத்த ளத்தில் மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராசனின் புதுப் பிக்கப்பட்ட நினைவிடங்களைத் திறந்துவைத்து அவர்களின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மு.பெ.சாமிநாதன், பி.கே. சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.