tamilnadu

ஜன.23 முழு ஊரடங்கு: அரசு அறிவிப்பு

சென்னை,ஜன.21- தமிழ்நாட்டில் வருகிற ஞாயிற்றுக்கிழ மையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படு கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளி யிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:- தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகை யில் ஜனவரி 12 மற்றும்  16 ஆம் தேதி ஞாயி ற்றுக்கிழமை முழு ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட்டது.  தற்போது தமிழ்நாட்டில் கொரோனா ஒமைக்ரான் வைரஸ் நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில், பொது மக்கள் நலன் கருதி தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜனவரி 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப் படும். இந்த முழு ஊரடங்கு நாளில்  அத்தியா வசிய செயல்பாடுகள் அனுமதிக்கப்படும்; தடை செய்யப்பட்ட செயல்பாடுகளுக்கான தடைகள் தொடரும். மேலும், வெளி யூர்களிலிருந்து வரும் பயணிகளின் நலன் கருதி, சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் போன்ற இடங்களில் வழக்க மான ஆட்டோக்கள், செயலி மூலம் முன் பதிவு செய்து இயக்கப்படும் வாடகை கார்கள் பயணிகளை ஏற்றிச் செல்ல அனு மதிக்கப்படும். மாவட்ட ரயில் நிலையங் களுக்கும் மற்றும் வெளியூர் பேருந்து நிலையங்களுக்கும் இது பொருந்தும். கொரோனா தொற்றிலிருந்து மக்க ளைக் காத்திட அரசு மேற்கொள்ளும் நோய்த்  தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;