மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு மதுரையில் ஏப்.2-6 தேதிகளில் நடைபெறுகிறது. இதையொட்டி, தீக்கதிர் நாளிதழ், மாநாட்டை வாழ்த்தி கேரள நிறுவனங்கள் மற்றும் கட்சியினரின் விளம்பரங்கள் அடங்கிய சிறப்பிதழ்களை வெளியிட உள்ளது. இந்த முயற்சியில் தீக்கதிர் திருவனந்தபுரம் செய்தியாளர் வி.ஜெயக்குமார் ஈடுபட்டுள்ளார். அவரை தீக்கதிர் அலுவலகத்தில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், மாநாட்டு வரவேற்புக் குழு செயலாளருமான சு.வெங்கடேசன் எம்.பி., பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.