சென்னை, அக். 10 - தேசிய கல்விக் கொள் கையை திரும்ப பெற வலியுறுத்தி அக்.15 அன்று சென்னை யில் ‘கல்வி பாதுகாப்பு மாநாடு’ நடைபெறுகிறது. இது தொடர்பாக பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பேரா.ஜே. காந்திராஜன் செய்தியா ளர்களிடம் கூறுகையில், “தேசிய கல்விக் கொள்கை-2020ஐ திரும்ப பெற வலியுறுத்தி 29 அமைப்புகள் ஒருங்கிணைந்து ஜனநாயக கல்வி பாதுகாப்பு கூட்டியக்கத்தை தொடங்கி உள்ளோம். இந்த அமைப்பு சார்பில் அக். 15 அன்று லயோலா கல்லூரியில் ‘கல்வி பாதுகாப்பு மாநாடு’ நடை பெற உள்ளது. இதில், கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்து, தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொள்கின்றனர்” என்றார். தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் பொதுச் செயலாளர் பேரா.சோ. சுரேஷ் குறிப்பிடுகையில், “கல்வித் துறையை சீரழிக்கும் வகையில் தேசிய கல்விக் கொள்கை உள்ளது. அதில், கல்லூரியில் மாணவர்கள் எப்போது வேண்டு மானாலும் சேரலாம், விலகிக் கொள்ளலாம் என்றுள்ளது. இதனால் மாணவர்களின் இடைநிற்றல் அதிகமாகும். இந்தியாவிலேயே, தமிழகத் தில்தான் உயர்கல்வி மாணவர் சேர்க்கை அதிகமாக உள்ளது. தேசிய சராசரி 27 விழுக்காடு என்றுள்ள நிலையில், தமிழகத் தின் 54 விழுக்காடாக உள்ளது. ஆனால், 2025க்குள் 50 விழுக் காடு மாணவர் சேர்க்கை என்று இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால், அந்த கல்விக்கொள் கையில் உள்ள பல அம்சங்கள், மாணவர் சேர்க்கையை குறைப்பதாக உள்ளது. எனவே, இந்த கல்விக் கொள்கையை கைவிட வலியுறுத்துகிறோம்” என்றார். இந்நிகழ்வின்போது, தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தின் பொதுச் செயலாளர் எஸ். சுப்ரமணி, தமிழ்நாடு அங்கன் வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டி.டெய்சி, இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜி.அரவிந்த்சாமி, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் பெருமாள்சாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.