மதுரை,மார்ச் 9- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 23 ஆவது மாநாடு மார்ச் 30,31 ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் மதுரையில் நடை பெற உள்ளது. இம்மாநாட்டை முன்னிட்டு மொழி உரிமை, மாநில உரிமை எனும் தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் மார்ச் 11 அன்று மாலை 5 மணியளவில் மதுரை மேற்கு ஒன்றியம் சிக்கந்தர் சாவடி பொன்னழகர் மஹாலில் நடைபெற உள்ளது. இக்கருத்தரங்கிற்கு கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராம லிங்கம் தலைமை வகிக்கிறார். மேற்கு ஒன்றியச் செயலாளர் பி.ஜீவானந்தம் வரவேற் புரையாற்றுகிறார். மதுரை நாடாளுமன்ற உறுப் பினர் சு.வெங்கடேசன் துவக்கி வைத்து உரை யாற்றுகிறார்.பேராசிரியர் அருணன், ஆழி செந்தில்நாதன் ஆகியோர் சிறப்புரையாற்று கின்றனர். கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட செய லாளர் மா.கணேசன், புறநகர் மாவட்ட செய லாளர் கே.ராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் சி.இராமகிருஷ்ணன், இரா.விஜயராஜன், எஸ்.கே.பொன்னுத்தாய், எஸ். பாலா ஆகியோர் வாழ்த்திப் பேசுகின்றனர்.
நூல் வெளியீடு
ஒன்றிய பாஜக அரசு இந்தியில் பதி லளிப்பது தொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு “இந்தியில் மட்டும் பதில் சட்ட விரோதம்” எனும் தலைப்பில் புத்தகமாக வெளியிடப்படு கிறது. இந்நிகழ்வினை மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.பாலகிருஷ்ணன், எஸ். மலர்விழி ஆகியோர் ஒருங்கிணைக்கின்றனர்.மேற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ். சரஸ்வதி நன்றி கூறுகிறார். இந்த கருத்த ரங்கை கட்சியின் மதுரை மேற்கு ஒன்றியக் குழு ஏற்பாடு செய்துள்ளது.