tamilnadu

img

உதவித் தொகை அல்ல; இது உரிமைத்தொகை!

தருமபுரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தருமபுரி, ஜூலை 24- குடும்ப தலைவிகளுக்கு மாதந் தோறும் வழங்கப்பட உள்ள ரூ.1000 என்பது  அரசாங்க உதவித்தொகை என கருதக் கூடாது. இது மகளிரின் உரிமைத் தொகை ஆகும் என தருமபுரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழா வில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000  வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகளின் விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்களன்று தொ டங்கி வைத்தார். மேலும், விண்ணப்பங் களை பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய் யும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, விண்ணப்பம் செய்ய வந்த மக ளிருடன் கலந்துரையாடினார்.  இதன்பின் தொடக்கவிழா மேடை யில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகை யில், தருமபுரி மாவட்டத்தில் 34 ஆண்டு களுக்கு முன்பு (1989 ஆம் ஆண்டு) மகளிர்  சுய உதவிக்குழு என்ற மாபெரும் அமைப்பை கலைஞர் தொடக்கி வைத்தார்.  இன்று மாபெரும் அமைப்பாக உருவெடுத் துள்ளது. மகளிர் யாருடைய தயவும் இல்லாமல், சுயமாக வாழ்க்கை நடத்த வழி வகுத்ததிட்டம் தான் மகளிர் சுய உதவிக்  குழு. தமிழ்நாட்டில் 4 லட்சத்து 57 ஆயி ரம் சுய உதவிக்குழுக்கள் உள்ளன. இதில்  51 லட்சத்து 46 ஆயிரம் மகளிர்கள் பயன டைந்துள்ளனர். கடந்தாண்டு மட்டும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.3 லட்சத்து 96 ஆயிரத்து 633 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என்றார். 1929 ஆம் ஆண்டில் செங்கல்பட்டில் தந்தை பெரியார் சுயமரியாதை மாநாட்டை  நடத்தினார். அதில் ஒரு தீர்மானம் தான்  பெண்களுக்கு சொத்தில் சம உரிமை. இந்த  தீர்மானத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு  முத்தமிழறிஞர் கலைஞர், பெண்களுக்கு சொத்தில் சம உரிமையை சட்டமாக்கினார்.  இதுதான் திராவிடம்.

தமிழ்நாடு அரசின் 2023 - 24 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், “மகளிருக்குச் சொத்துரிமையும், உள் ளாட்சி அமைப்புகளில் தனி இடஒதுக்கீடு  அளித்தது முதல் தற்போது கட்டண மில்லாப் பேருந்து பயணம் வழங்கியது வரை, மகளிரின் நலன் காத்து அவர்களது உரிமைகளை நிலைநாட்டுவதில் எப்போ தும் அக்கறையுடன் இந்த அரசு செயல் பட்டு வருகிறது. அந்த வரிசையில் குடும்பத்  தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய்  வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி யில் அறிவித்தபடி, தகுதிவாய்ந்த குடும்பங் களின் குடும்பத் தலைவிகளுக்கு வரும்  நிதியாண்டில் மாதந்தோறும் உரிமைத் தொகையாக வழங்கப்படும். வரலாற்றுச் சிறப்புமிக்க இத்திட்டம், கலைஞரின் நூற்றாண்டான இந்த ஆண்டில், பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதியன்று துவங்கப்பட உள்ளது. மகளிரின் சமூக பொருளாதார வாழ்வில் ஒரு புரட்சியை ஏற்படுத்தக்கூடிய இத்திட்டத்திற்காக, வரவு - செலவுத்திட்டத்தில் 7,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் ஆண்டு ரூ.12 ஆயிரம் கோடியாக நிதி ஒதுக்கப்படும். இத்திட்டத்தை அரசாங்க உதவித்தொ கையாக கருதக்கூடாது. பெண்களின் உரிமை தொகையாக கருத வேண்டும். இத் திட்டத்தின் மூலம் விளிம்பு நிலை, வறு மையில் உள்ள ஏழை பெண்கள் வாழ்க்கை  முன்னேற்றத்திற்கு வழிவகை செய்யும், என்றார்.  முன்னதாக, இந்நிகழ்ச்சியில், அமைச் சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி.எஸ்.செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.கே.மணி,  எஸ்.பி.வெங்கடேஸ்வரன், இரா.ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் பி.பழ னியப்பன், முதல்வரின் கூடுதல் தலை மைச் செயலாளர் நா.முருகானந்தம், தரும புரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி ஆகியோர்  கலந்து கொண்டனர்.