சென்னை, மே 8- தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் இஸ்ரோ பதவி களுக்கான தேர்வுகளை எதிர் கால நியமனங்களில் நடத்த வழிகாட்டல் கேட்டு எழுதுவ தாக சு. வெங்கடேசன் எம்.பி. யின் கடிதத்திற்கு அதன் இயக்குநர் பதில் அளித்துள் ளார். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: தமிழகத்தில் இயங்கி வரும் விண்வெளி ஆராய்ச்சி உந்தும வளாகம் (ISRO Propulsion Complex) இரண்டு பணி நிய மன அறிவிக்கைகளை ( IPRC /RMT/2019/3/22.09.2019 & IPRC/ RMT/ 2019/2) வெளி யிட்டு எழுத்துத் தேர்வுகளை யும் கடந்த 10.04.2022 அன்று சென்னையிலும், நாகர்கோவி லிலும் நடத்தியது. அது “சி” பிரிவு, “பி” பிரிவு பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் ஆகும். அவை அனைத்துமே சாதாரண நிலை யில் இருந்து பணியாற்றும் ஊழியர்களுக்கான தேர்வு. ஆனால் எழுத்துத் தேர்வில் இலகுரக வாகன ஓட்டுநர், சமை யலர் பதவிகளுக்கான கேள் வித் தாள்களில் மட்டுமே தமிழ் வடிவமும் இடம் பெற்றிருந் தது.
மற்ற பதவிகளுக்கான தேர்வு கேள்வித் தாள்கள் இந்தி/ ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தன. பொருத்துபவர் (Fitter), பற்ற வைப்பவர் (Welder) போன்ற பதவிகளும் அதில் அடக்கம். பெரும்பாலான தேர்வர்கள் ஐ.டி.ஐ பட்டயப் படிப்பு முடித்த வர்களே. தமிழ் வழிக் கல்வியில் வந்தவர்கள். ஒடுக்கப்பட்ட சமூ கங்களை சார்ந்தவர்கள். எனவே தமிழ் வடிவக் கேள் வித்தாளுடன் மறு தேர்வை நடத்த வேண்டுமென 20.04.2022 அன்று விண்வெளி ஆராய்ச்சி உந்தும வளாக இயக்குநருக்கு கடிதம் எழுதி இருந்தேன். அதற்கு IPRC/DR/RMT/ 01/ 06.05.2022 தேதியிட்டு பதி லளித்துள்ள அந்நிறுவனத்தின் இயக்குனர் டி. அழகுவேலு தேர்வு குறித்த கருத்துகளுக்கு நன்றி தெரிவித்துள்ளதோடு, இக்கோரிக்கை சம்பந்தமாக விண்வெளித் துறைக்கு பிரிவு “பி” மற்றும் “சி” பதவிகளு கான தேர்வுகளை ஆங்கிலம், இந்தி மட்டுமின்றி மாநில மொழி களிலும் எதிர்கால நியமனங்க ளில் நடத்த வழிகாட்டல் கேட்டு எழுதுவதாகவும் தெரிவித்துள் ளார். எதிர்கால தேர்வுகள் பற்றிய பதில் மகிழ்ச்சிதான். நடந்து முடிந்த தேர்வில் பாதிக்கப்பட்ட வர்கள் இருந்தால் அவர் களுக்கு நியாயம் கிட்ட வேண் டுமே என்ற கேள்வி இன்னும் எஞ்சி நிற்கிறது. இவ்வாறு அதில் தெரிவித் துள்ளார்.