tamilnadu

img

பட்டாசு தடையை நாடு முழுவதும் நீட்டிக்க திட்டமா? உச்சநீதிமன்ற கேள்வியால் உற்பத்தியாளர்கள் கலக்கம்

பட்டாசு தடையை நாடு முழுவதும் நீட்டிக்க திட்டமா? உச்சநீதிமன்ற கேள்வியால் உற்பத்தியாளர்கள் கலக்கம்

விருதுநகர், செப்.14 -  பட்டாசுக்கான தடையை நாடு முழு வதும் ஏன் நீட்டிக்கக் கூடாது என்று ஒன்றிய அரசிடம் உச்ச நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்வியால் பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கலக்க மடைந்துள்ளனர். உச்ச நீதிமன்றம் தனது 29.10.2021 ஆம் தேதியிட்ட தீர்ப்பில், பொது மக்களின் உடல் நலன் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு  விளைவிக்கக் கூடிய பேரியம் உப்பு  கலந்து தயார் செய்யப்பட்ட பட்டாசுகள் மற்றும் சரவெடி போன்ற பட்டாசுகளை தயாரிக்கவோ, சேமித்து வைக்கவோ, விற்பனை செய்யவோ அல்லது வெடிக்க வோ தடை விதித்து ஆணையிட்டுள்ளது. மேலும், சுற்றுச்சூழல் மாசு ஏற்படு வதைக் குறைக்கும் வகையில் பசுமை பட்டாசுகள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அதையடுத்து, ஒன்றிய அரசின் ‘நீரி’ அமைப்பு மூலம் பசுமை பட்டாசுகளுக்கான தொழில் நுட்பங்கள் உருவாக்கப்பட்டன. அதை பின்பற்றி விருதுநகர் மாவட்டம் சிவகாசி யில் பசுமை பட்டாசுகள் உற்பத்தி செய்யப் பட்டு வருகின்றன. இந்நிலையில், பட்டாசுக்கான தடையை  நீக்கக் கோரி பட்டாசு தயாரிப்பு நிறுவனங் கள் தாக்கல் செய்த மனு உச்சநீதி மன்றத்தில் செப்.12 அன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அப்போது, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கூறுகையில், “பட்டாசு களுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு நாடு முழுவதும் இருக்க வேண்டும். வசதி படைத்த வர்கள் வாழும் தில்லிக்கு மட்டுமானதாக இருக்கக் கூடாது. சுத்தமான காற்றை சுவாசிக்க நாட்டின் பிற பகுதி மக்களுக்கு உரிமை இல்லையா? பட்டாசுக்கான தடையை நாடு முழுவதும் ஏன் நீட்டிக்கக் கூடாது?” என கேள்வி எழுப்பினார். மேலும், “பட்டாசு விற்பனைக்கும் வெடிப்பதற்கும் தில்லியில் விதிக்கப் பட்டுள்ள தடையை நீக்கக் கோரும் மனு வுக்கு ஒன்றிய அரசு பதில் அளிக்க வேண்டும். பசுமை பட்டாசு தயாரிப்பு குறித்த அறிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால், பட்டாசு உற்பத்தியாளர்களும், விற்பனையாளர்களும் கலக்கமடைந் துள்ளனர். பட்டாசுக்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டால் இத்தொழிலை நம்பி யுள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், பட்டாசுக்கு தடை விதிக்காமல் பாதுகாப்பான பட்டாசு உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும் என்றும் பட்டாசு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் 1,570 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 1,101 ஆலைகள் உள்ளன. இத்தொழிலில் நேரடியாகவும் உபதொழில்கள் மூலம் மறைமுகமாகவும் விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.