tamilnadu

img

தங்க கடத்தல் வழக்கு திசை மாறுகிறதா? சுங்கத்துறை ஊழியர்கள் அதிரடி இடமாற்றம்

கொச்சி, ஜூலை 24- தூதரக பார்சலில் தங்கம் கடத்திய வழக்கை விசாரித்து வரும் 2 அதிகாரிகள் உட்பட சுங்கத் துறையில் நடத்தப்பட்ட இடமாற்றல் உத்தரவு பெரும் விவாதத்தை ஏற் படுத்தியுள்ளது. வழக்கமான இடம் மாறுதல் தான் என விளக்கம் அளிக்கப்பட்டுள் ளது. ஆனால் மிகவும் முக்கியத்து வம் உள்ள தங்க கடத்தல் வழக்கின் விசாரணையில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகளிடம் விவாதிக்காமல் கொச்சி சுங்கத்துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆய்வா ளர், கண்காணிப்பாளர், விசார ணையாளர் நிலையில் உள்ள 78 ஊழியர்களை இடம் மாற்றல் செய்யும் உத்தரவு புதனன்று பிறப்பிக்கப்பட்டது. தங்க கடத்தல் வழக்கின் விசாரணைக்குழு எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து தலைமை ஆணையர் தற்காலிக மாக அந்த உத்தரவை நிறுத்தி வைத்துள்ளார்.

 சுங்கத் துறையின் தடுப்பு ஆணையர் சுமித் குமார் உட்பட 5 பேரிடம் தங்க கடத்தல் வழக்கின் விசாரணைக்கான முக்கிய பொறுப்பு உள்ளது. இந்த வழக்கில் உதவி வரும் சுமார் 40 பேரில் அனு பவம் உள்ளவர்கள் குறைவு. இந்நிலையில் நீண்ட கால அனுப வம் உள்ள ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது விசா ரணை நடத்தும் அதிகாரிகளுக்கு கவலையளிப்பதாகும். குழுவில் உள்ள பலரும் சுங்கத்துறையின் பல்வேறு பிரிவுகளில் இருந்து மாற்றுப் பணியாகவும் புதிதாக நியமிக்கப்பட்டவர்க ளுமாவர். தங்க கடத்தல் வழக்கின் விசாரணை பொறுப்பு சுங்கத்துறை; தடுப்பு பிரிவின் ஆணையர் சுமித் குமாரிடம் உள்ளது. அவர் இந்த இடம் மாற்றல் உத்தரவு குறித்து எதையும் தெரிவிக்கவில்லை. தங்க கடத்தல் குற்றவாளிகளுக்காக முதல்வர் அலுவலகம் தலையிட்ட தாக கூறப்பட்டதை மறுத்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக தலைவர் கே.சுரேந்திர னும் தேசிய நிர்வாகிகளும் கூறி னர். முதல்வர் அலுவலகத்திலி ருந்து அழைப்பு வந்ததா என்கிற ஊடகத்தினரின் கேள்விக்கு அப்படி யாரும் அழைக்கவில்லை என்று துணை ஆணையர் கூறியதே அவர்களது ஆத்திரத்துக்கு காரண மாகும். இப்போதைய இடமாற்ற மும் விசாரணையை திசைமாற்றும் உள்நோக்கம் கொண்டதா என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது.