tamilnadu

img

பழைய ஓய்வூதியம் சாத்தியமா? நிதியமைச்சர் விளக்கம்

சென்னை,மே 8- தமிழ்நாடு சட்டப்பேரவை யில் பொதுத்துறை,நிதி, மனிதவள மேலாண்மை உள்ளிட்ட மானியக் கோரி க்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலளித்த நிதித்துறை அமைச்சர் டி.ஆர்.பழனிவேல் தியாக ராஜன்,“ தமிழகத்திலிருந்து ஒன்றிய அரசால் ரூ.1- வரியாக நேர்முக மாகவோ, மறைமுகமாகவோ வசூலிக்க ப்பட்டால், அதில் வெறும் 35 பைசா தான் நமக்குத் திரும்பி வருகிறது. மீதி உள்ள 65 பைசா ஒன்றிய அரசுக் கும் பிற மாநிலங்களுக்கும் பயன்படு த்தப்படுகிறது. ஆனால், அந்த நிதியைப் பெறும் மாநிலங்கள், வடகிழக்கு மாநில ங்களில் எல்லாம் எம்.எல்.ஏ.க்களுக்கு ஊதியமாக ரூ.2 லட்சம், ரூ.3 லட்சம் வழங்கப்படுகிறது. நிதியை வளர்க்கும் மாநிலமான தமிழகத்தில் சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு ரூ.1 லட்சமும், நிதியைப் பெறும் மாநி லங்களில் எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.2 லட்சத்துக்கு மேல் நிதி வழங்குவது நியாயம் இல்லாதது. இது தொடர்பாக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடை முறைப்படுத்துவோம் என்று பல மாநிலங்களில் கூறியுள்ளன. ஆனால், உலக அளவில் எனக்குத் தெரிந்த நிதி மேலாண்மை, நிதி சார்ந்த சட்டங்கள் அடிப்படையில் இதில் விளைவுகள் இரு க்கும் என்று கருதினேன். ராஜஸ்தான் மாநிலம் புதிய ஓய்வூதியத்திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதியத் திட்டத் துக்குப் போகப் போவதாகக் கூறி, பயனாளிகளுக்கு உள்ள சேமநலநிதி கேட்டபோது, அதைக் கேட்பதற்கான உரிமை இல்லை என்கிற பதில் கிடைத்துள்ளது. 2003-க்கும் முன்னால் உள்ள பழைய ஓய்வூதிய திட்டத்துக்கும் 2004-க்கும் பின்னால் உள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கும் பெரிய வித்தியாசம் இரு க்கிறது. 2003-க்கும் முன்னால் உள்ள திட்டம் முழுநிதியும் அரசின் பொறுப்பில் அரசின் கணக்கில் இருந் தது. அப்படியானால், அது அரசு நிதி. ஆனால், புதிய ஓய்வூதியத் திட்டம் அனைத்தும் தனிநபர் பணமாக உள் ளது. அது ஒவ்வொருவருடைய நபரின் பெயரில் கணக்கில் வைக்கப்படுகிறது. தனிநபர் நிதியாக வைக்கப்பட்ட பிறகு, அதை எடுத்து அரசு நிதியாக்குவதற்கு சட்டம் அனுமதிக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.