ஆஸ்திரியத் தலைநகர் வியன்னாவில் நடை பெற்று வரும் ஈரானின் அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தையில் பிரான்ஸ் எதிர்மறையான உத்தி யைக் கையாள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகைய நடவடிக்கைகள் 2015 ஆம் ஆண்டில் போடப்பட்ட உடன்பாட்டைப் புதுப்பிக்கும் முயற்சிக ளைக் குலைத்து விடும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இத்தாலியிலிருந்து துனீசியாவுக்கு சட்டவிரோத மாக நச்சுத்தன்மை கொண்ட கழிவுகளை அனுப் பியதற்கு எதிரான போராட்டத்தில் தன்னார்வலர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 2020 ஆம் ஆண்டிலிருந்து 200 பெரிய சரக்கு பெட்டகங்களில் 7 ஆயிரத்து 900 டன்கள் கொண்ட கழிவுகள் துனீசியாவின் கடலோரப் பகுதி நகரமான சூசேயில் வந்திறங்கின. இது சட்ட விரோதம் என்று கூறி தொண்டு நிறுவனங்களும், தன்னார்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இந்தக் கழிவுகள் தற்போது இத்தாலிக்கு திரும்பவும் அனுப்பப் பட்டிருக்கிறது.
கொரோனா தடுப்பூசிக்கு எதிராக நியூசி லாந்தில் நடைபெற்று வரும் போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. நியூசிலாந்தின் தலை நகர் வெலிங்டன், கடந்த மூன்று வார காலமாக முடங்கி யிருந்தது. வன்முறையாக மாறியது பற்றி செய்தியா ளர்களிடம் பேசிய நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர் டெர்ன், “முன்களத்தில் உள்ள காவல்துறையினர் மீதும், நாடாளுமன்றத்தின் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள் ளன. இது மிகவும் தவறான நடவடிக்கைகளாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.