tamilnadu

கோடை விடுமுறைக்கு பின் சிபிஎம் வழக்கு மீது விசாரணை!

கோடை விடுமுறைக்கு பின் சிபிஎம் வழக்கு மீது விசாரணை!'

கொடிக் கம்பங்களை அகற்றுவதற்கு எதிராக மேல்முறையீடு

சென்னை, ஏப். 25 - அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள், தமிழ்நாடு முழுவதும் வைத்திருக்கின்ற கொடிக்கம்பங்களை அகற்ற  வேண்டுமென கடந்த 27.1.2025 அன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தனி நீதிபதி இளந்திரையன் உத்தரவு பிறப்பித்திருந்தார்.  இந்த உத்தரவை எதிர்த்து, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் 21.04.2025 அன்று மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. “கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி, உழைக்கும் வர்க்கத் தினர் மற்றும் விவசாயிகளை பிரதிபலிக்கின்ற அடை யாள சின்னமாகும். அதை எடுக்கச் சொல்வது ஜன நாயக மீறலாகும்,” என்றும்;, “கொடிக்கம்பங்களை அகற்ற உத்தரவு போடு வதற்கு முன் எங்கள் தரப்பு நியாயத்தை கேட்க வில்லை” என்றும் மனுவில் கூறப்பட்டிருந்தது. அந்த அடிப்படையில், 27.1.2025 அன்று பிறப்பி க்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தப்பட்டு இருந்தது. அதேபோல, தனி நீதிபதி உத்தரவுக்கு எதி ராக ஏற்கெனவே ஒருவர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை, இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தள்ளு படி செய்ததை எதிர்த்து, மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சீராய்வு  மனுவும் தாக்கல் செய்யப் பட்டது. இந்த மனுக்கள் வெள்ளிக்கிழமையன்று (25.04.2025) சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் நிஷாபானு மற்றும் ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத் ஆஜரானார்.  அப்போது, வழக்கு ஒத்திவைக்கப்பட்டு, கோடை விடுமுறைக்குப் பின் விசாரணை நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கில், வழக்கறிஞர் திருமூர்த்தி மற்றும் ஜூனியர் வழக்கறி ஞர்கள் எஸ். அருண்குமார், எஸ். சிவசேகர், எம். கிஷோர், ஜே. கணேஷ், ஆர்.ஜோஸ்வா,  கே. மும்தா, ஆர். சிவபாரதி, கே. சுந்தரராஜ், ஆர்.இளவரசன் ஆகி யோரும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் ஆஜராகினர்.