பெரம்பலூர் ஜன. 22 தலித் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட கை.களத்தூரில் அவரது குடும்பத்தினரிடம் தேசிய தாழ்த்தப் பட்டோர் ஆணைய அதிகாரிகள் விசார ணை நடத்தினர். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந் தட்டையை வட்டம், கை.களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (30).அதே ஊரை சேர்ந்தவர் தேவேந்தி ரன். இவர்கள் இருவரும் அதே ஊரில் உள்ள ஒருவரிடம் ஓட்டுநர் களாக வேலை பார்த்து வந்தனர். இந்நி லையில் கடந்த 17 ஆம் தேதி மணிகண்டனுக்கும், தேவேந்திர னுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மணிகண்டனை தேவேந்தி ரன் கழுத்தறுத்து படுகொலை செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக கை.களத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேவேந்திர னை கைது செய்து சிறையில் அடைத்த னர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை யன்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குனர் ரவிவர்மன் தலைமையிலான குழுவினர் கை.களத்தூருக்கு வந்து,கொலை செய்யப்பட்ட மணிகண்டனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து கொலை நடந்த இடத்தைப் பார்வையிட்டு, காவல்துறையினரிடம் விசாரணை நடத்தினர் .விசாரணை யின்போது காவல் துணை கண்காணி ப்பாளர் தனசேகரன், வேப்பந்தட்டை வட்டாட்சியர் மாயகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோரிக்கை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மூத்த தலைவர் என்.செல்லத்துரை மற்றும் நிர்வாகிகள் ஆகியோர், விசாரணைக்கு வந்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய அதிகாரிகளைச் சந்தித்தனர்.அப்போது, உயிரிழந்த மணிகண்டன் மனைவி மீனாவிற்கு அரசு வேலை யும், நிவாரண உதவி மற்றும் குழந்தை கள் உள்ளதால் மாதமாதம் பென்சன் தொகை வழங்க வேண்டும் என்று வலி யுறுத்தினர். இதைக் கேட்ட ஆணைய அதிகாரிகள், இந்த கோரிக்கையை தமிழக அரசுக்கு பரிந்துரை செய்வ தாக தெரிவித்தனர்.