புதுதில்லி , ஜூன் 10- விலங்குகளுக்காக உள் நாட்டிலேயே தயாரிக்கப் பட்ட முதல் கொரோனா தடுப்பூசியை ஒன்றிய அரசு அறிமுகம் செய்தது. கொரோனா வைரஸ் பாதிப்பு மனிதர்களை மட்டுமல்லாது விலங்குகளையும் பாதித்து வருகிறது. ஹரியானாவில் முதல் முறையாக கேனைன் வகை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சுமார் 15 நாய்கள் உயிரிழந்தன. இந்நிலையில், இந்தியாவில் விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ‘அனோகோவாக்ஸ்’ என்ற அந்த தடுப்பூசியை ஹரியானாவில் உள்ள தேசிய குதிரைகளுக்கான ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ளது. இதனை ஒன்றிய வேளாண்துறை அமைச்சர் தோமர் காணொலி வாயிலாக அறிமுகப்படுத்தினார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நாய்கள், சிங்கம், சிறுத்தை, எலிகள் மற்றும் முயல்களுக்கு ‘‘அனோகோவாக்ஸ்’’ தடுப்பூசி பாது காப்பானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.