tamilnadu

நவம்பர் இறுதிக்குள் 100 விழுக்காடு முதல் தவணைத் தடுப்பூசி செலுத்த இலக்கு

சென்னை, அக். 30 நவம்பர் மாத இறுதிக்குள் 100 சதவீதம்  முதல் தவணைத் தடுப்பூசியும் 50 சதவீதத் திற்கு மேல் 2ம் தவணைத் தடுப்பூசியும் செலுத்திய முதல் மாநிலம் என்ற பெரு மையை தமிழ்நாடு அடையும் என்றும் மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை  அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித் துள்ளார்.   சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம் கஸ்தூரிபாய் நகர் குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற 7வது மெகா தடுப்பூசி சிறப்பு முகாமினை சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 7 வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம்  மாநிலம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் இடங்க ளில் காலை 7 மணி முதல் நடைபெற்று  வருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 5 கோடியே 73 லட்சத்து 91 ஆயிரத்து  6 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட் டுள்ளது. இதில் 70 சதவீதம் முதல்  தவணைத் தடுப்பூசியும், 29 சதவீதம் 2ம்  தவணைத் தடுப்பூசியும் செலுத்தப்பட் டுள்ளது. சென்னை மாநகராட்சியை பொறுத்த வரை தடுப்பூசி செலுத்துவதில் மிக சிறப்பான  முறையிலே செயல்பட்டு வருகிறது. குறிப்பாக இந்தியாவிலேயே மாற்றுத் திறனாளிகளுக்கும், முதியோர்களுக்கும் அவர்களின் இல்லங்களுக்கு சென்று  தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மாநக ராட்சி சிறப்பாக செயல்படுத்தியது.

 தற்போது 2ம் தவணை தடுப்பூசி செலுத்த  வேண்டிய நாட்களை கடந்து தடுப்பூசி செலுத்தாத நபர்களின் விபரங்களை எடுத்து அவர்களின் இல்லங்களுக்கு சென்று சீட்டுகள் வழங்கி தகவல் தெரிவிக்கப்பட்டு 2ம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள்.  சென்னை மாநகராட்சியை பொறுத்த வரையில் 87விழுக்காடு மக்களுக்கு முதல் தவணைத் தடுப்பூசியும், 48விழுக்காடு மக்களுக்கு 2ம் தவணைத் தடுப்பூசியும் செலுத்தியுள்ளது. இந்தியாவில் ஒட்டு மொத்தமாக 35 சதவீதம் மட்டுமே 2ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று கர்ப்பிணி தாய்மார்கள், ஆதரவற்றவர்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் மலைவாழ் மக்கள் போன்ற பல் வேறு தரப்பு மக்களுக்கும் தடுப்பூசி செலுத்து வதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்மாதிரியாக திகழ்கிறது.  தமிழ்நாட்டில் இதுவரை கோவாக்சின் 2வது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நபர்கள் 13 லட்சம் பேர் உள்ள  நிலையில் 3 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே  கையிருப்பில் உள்ளது. ஒன்றிய அரசின்  சார்பில் 4 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் கூடுதலாக வழங்கப்பட் டுள்ளது. தற்போது 7 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதால் அனைத்து முகாம்களிலும் 2ம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டிய நபர்கள் தாராளமாக சென்று கோவாக்சின் தடுப்பூ சியை எடுத்துக்கொள்ளலாம்.  செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத் தில் ஒன்றிய அரசு ஒதுக்கிய தடுப்பூசிகளை முழுவதும் பயன்படுத்தி காரணத்திற்காக, முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று  அக்டோபர் மாதத்தில் 1.40 கோடி தடுப்பூசி களை ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது. நவம்பர் மாத இறுதிக்குள் 100 சதவீதம்  முதல் தவணைத் தடுப்பூசியும் 50 சதவீதத் திற்கு மேல் 2ம் தவணைத் தடுப்பூசியும் செலுத்  திய முதல் மாநிலம் என்ற பெருமையை தமிழ்நாடு அடையும் வகையில் நாம் அனை வரும் செயல்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்றார்.