tamilnadu

உழைப்பாளி வர்க்கம் உயர்வு பெற மார்க்சியத்திற்கு நிகரான தத்துவம் வேறு எதுவும் இல்லை

சேலம், மார்ச் 14- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் சேலத் தில் மார்ச் 14 அன்று துவங்கியது. கூட் டத்தில் பங்கேற்க வருகை தந்த  கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன்,  கட்சியின் மாவட்டக்குழு அலு வலகமான சேலம் சிறை தியாகிகள் நினை வகம் முன்பு அமைந்துள்ள மாமேதை காரல் மார்க்ஸ் சிலைக்கு மாலை அணிவித்து செவ்வணக்கம் செலுத்தினார்.  மார்ச் 14, காரல் மார்க்சின் 139 ஆவது நினைவு தினமாகும். இதையொட்டி நடை பெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று செங்கொடி யேற்றி, மார்க்ஸ் சிலைக்கு மாலை அணிவித் தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, இன்றைய தினம் உலகத் தொழிலாளி வர்க்கத்தின் தத்துவ மேதை தோழர் காரல் மார்க்ஸ் அவர்களின்  139வது நினைவு தினமாகும். உலகம் இன்றைக்கு ஏகாதிபத்திய நெருக்கடி மிகுந்த சூழ்நிலையில் சிக்கியுள்ளது.  இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் உலகம் முழுவதும் இருக்கும் மக்களுடைய வாழ்வு மேம்பட, குறிப்பாக கொடிய சுரண்டலுக்கு ஆளாகியிருக்கும் தொழி லாளி வர்க்கம் விடுதலை பெற்றிட வேண்டு மானால், அது மார்க்ஸ் வகுத்து தந்த தத்து வத்தின் அடிப்படையில் தான் முடியும். இதை, கொரோனா காலத்தில் கூட உலகம் உணர்ந்தது. பல ஏகாதிபத்திய நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் பல லட்சக்கணக்கான உயிர்களை பலி கொடுத்த சூழ்நிலையில், சீனா உள்ளிட்ட  சோசலிச நாடுகள் தான் ஓரளவு கட்டுப்படுத்தி, மனித உயிர்களை பாதுகாத்தன. இது போன்ற நிகழ்வுகள் மார்க்சியம் தான் மேலானது, சோசலிசமே உயர்ந்தது, இதற்கு நிகரானது எதுவுமே இல்லை என்பதை உணர்த்துகிறது. இந்தியா வில் கம்யூனிஸ்ட் இயக்கம் பல சோதனை களுக்கு உள்ளாகி இருக்கும் நிலை யில் மார்க்சிய தத்துவத்தை தொடர்ந்து  முன்னெடுத்து செல்ல, இந்திய பாட் டாளி வர்க்கத்தின் வாழ்வு வளம் பெற ஆக்கப் பூர்வமான வழிகளை உருவாக்கி நடைபோடு வோம், அதன் அடையாளமாகவே தோழர் மார்க்ஸ் அவர்களின் நினைவு தினத்தை  இன்றைய தினம் கடைபிடித்துள் ளோம். 

 பாஜக அரசு நிச்சயம் வீழும்

ஐந்து மாநிலங்களுக்கு நடந்த தேர்தலில் 4ல் பாஜக வெற்றி பெற்றுள்ளது.  இதனால் இனி வரக்கூடிய எல்லா தேர்தலிலும் வெற்றிபெறும் முகாந்திரம் உள்ளது போல் பாஜக சொல்லிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, 2024ம் ஆண்டு இங்கு ஆட் சிக்கே வந்துவிடுவோம் என்று சொல்லி இருக் கிறார். தேர்தலில் ஒரு முறை வெற்றி  பெற்ற கட்சி அடுத்தமுறை படுதோல்வி  அடைந்த நிகழ்வுகளை எல்லாம் ஏற்கனவே பார்த்து இருக்கிறோம். ஐந்து மாநில தேர்தலில் மத உணர்வை  தூண்டிவிட்டு பாஜக வெற்றி பெற்றுள்ளது. இந்த அடிப்படையில் ஆட்சியை தக்கவைத் துள்ள பாஜக, இந்தியா முழுவதும் வெற்றி பெறுவோம் என்று கூறுவது ஏற்புடையதல்ல. தற்போதுள்ள பாஜக அரசாங்கம் 2024ம் ஆண்டு நாடாளு மன்றத்தேர்தலில் வீழ்த்தப்படும் நிலை உருவாகும். காங்கிரஸ் மட்டுமல்ல, நாட்டில் உள்ள மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் பாஜவை வீழ்த்த ஒரே மேடையில் ஒன்றிணையும் நிலை உருவாகி வருகிறது.

தொழிலாளி வயிற்றில் அடிப்பதா?

எப்போதும் இல்லாத அளவுக்கு பிஎப் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. தொழி லாளி வர்க்கத்தை படிப்படியாக ஒன்று மில்லாமல் ஆக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு நினைக்கிறது. சுமார் 9 லட்சம் கோடி வராக் கடன் கார்ப்பரேட்டுகளுக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஏர் இந்தியாவை டாடா வுக்கு 18 ஆயிரம் கோடிக்கு விற்பனை செய் துள்ளது. எல்லா பொதுத்துறையும் அடி மட்ட விலைக்கு கார்ப்பரேட்டுகளுக்கு விற் பனை செய்யப்படுகிறது. தொழிலாளிக்கு மட்டும் சட்ட உரிமை, பிஎப் வட்டி விகி தத்தை குறைப்பது என்ன நியாயம்?     

ஆளுநருக்கு கண்டனம்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாது காப்பது, மதபூசல், சாதி கலவரங் களை முளையிலேயே களையெடுப் பது, அரசு செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாயும் கடைசி மனிதனுக்கு செல்வது என்பதெல்லாம் அரசின் நல்ல நோக்கங்கள். அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் முதல்வர் பேசியிருப்பதை முனைப்புடன்  செயல்படுத்தவேண்டும். தமி ழக ஆளுநரின் நடவடிக்கைகள், மாநில  அரசின் உரிமைகளை, மக்களின் உணர்வு களை பறிக்கும் முறையில் இருக்க கூடாது. அந்தநிலை தொடர்ந்தால், ஆளுந ரின் பதவி தேவையா என விவாதிக்க வேண்டிய சூழல் உருவாகும். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறினார்.  இச்சந்திப்பின் போது  மாநில செயற் குழு உறுப்பினர் பி.செல்வசிங், மாவட்ட செய லாளர் மேவை.சண்முகராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.உதயகுமார், எம்.குணசேகரன் உள்ளிட்டோர்  உடனிருந்தனர்.