tamilnadu

img

நம்பிக்கை அளிக்கும் சர்வதேச பேச்சுவார்த்தைகள்!

அமெரிக்கா ஈரானுடன் செய்துகொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து டொனால்ட் ட்ரம்ப் காலத்தில் அமெரிக்கா வெளியேறியது. இந்த ஒப்பந்தத்தில் இணைந்துகொள்ள ஜோ பைடன் விரும்புகிறார். இதற்காக வியன்னாவில் இதுவரை எட்டு சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள் ளன. ஈரான் அமெரிக்காவை நம்பி நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை.  ரஷ்யா, சீனா மற்றும் இதர நடுநிலை நாடுகள் மூலமே பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறது. பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனும் அமெரிக்கா வும் ஈரானை நம்ப தயாராக இல்லை. டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை யில் போட்ட ஒப்பந்தப்படி நடந்து கொண்டிருப்பதாக ஈரான் கூறுகிறது. ஈரானின் நிதி 700 கோடி டாலர் தென்கொரிய வங்கிகளில் முடங்கி கிடப் பதை மாற்றி ஈரானுக்கு கொண்டுவரும் நடைமுறைகளை தீர்மானிப்ப தற்காக ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த தென் கொரியாவின் மூத்த அமைச்சர் வியன்னாவிற்கு வருவதாக நல்ல செய்தி உள்ளது.  இதற்கான பச்சைக் கொடியை அமெரிக்கா காட்டி உள்ளதாக தெரிகிறது. மாஸ்கோவில் ரஷ்யாவிற்கும் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவிற்கும் இடையே உக்ரைன் எல்லையில் படை குவிப்பு பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. நேட்டோ ஆக்கி ரமிப்பு, ரஷ்யாவை சுற்றியுள்ள நாடுகளில் நேட்டோ படைகள் நுழைதல் குறித்து பேச ரஷ்யா விரும்புகிறது.  

அடுத்த வாரம் நடைபெறும் இப்பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படலாம். ரஷ்ய பிரதமர் புதின், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உடன் டிசம்பர் மத்தியில் நீண்ட நேரம் வீடியோ காலில் பேசினார். நேட்டோவின் அஜண்டாவில் ரஷ்யா வின் பாதுகாப்பையும் சேர்க்க வேண்டும் என ரஷ்யா கோரிக்கை வைக்கி றது. ஜோ பைடன் இவற்றை நிராகரித்துள்ளார். இருப்பினும் மாஸ்கோ பேச்சுவார்த்தைக்கு அமெரிக்க குழுவும் வருகிறது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா நாடுகளின் கூட்டமைப்பில் சர்வதேச அளவில் நிதி பரிவர்த்தனைகளுக்கு ஸ்விப்ட் சிஸ்டம் பயன்படுத்துவது குறித்து விவாதித்து வருகின்றனர். இது நிறைவேறினால் சர்வதேச நிதி பரிவர்த்தனைகளில் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் பிடி தள ரும். ஸ்விஃப்ட் என்பது (Society for Worldwide Interbank Tele communications). பெல்ஜியம் கூட்டுறவு சொசைட்டி மூலம் உலக வங்கி களுக்கு இடையே நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.