tamilnadu

img

மருத்துவ படிப்புக்கு உள்ஒதுக்கீடு: சிறப்பு சட்டத்திற்கு குழு அமைப்பு

சென்னை, மார்ச் 21- ‘நீட்’ தேர்வில் வெற்றி பெறும் அரசு  பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு சிறப்பு சட்டம்  கொண்டு வரப்படும் என்று தமிழக சட்டப் பேரவையில் சனிக்கிழமையன்று (மார்ச்21) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பேரவை 110-ன் விதியின் கீழ்  அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமி,“நீட் தேர்வு முறை 2016-17 ஆம் கல்வி ஆண்டி லிருந்து மத்திய அரசு அறிமுகப்படுத்தி யது. இதில் தமிழ்நாட்டிற்கு அந்த ஆண்டு விதிவிலக்கு வழங்கப்பட்டது. அரசும், பொது மக்களும், தமிழ்நா டும், நீட் தேர்வை கடுமையாக எதிர்த்து  வருகின்றோம். 31.1.2017 அன்று, ஒரு  சட்ட முன்வடிவு ஒருமனதாக நிறை வேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொரடப்பட்டுள்ளது. நீட் தேர்வை அறிமுகப்படுத்திய பிறகு, அத்தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசு பள்ளி மாண வர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. இந்த நிலை வரும் ஆண்டு களில் தொடரக்கூடாது என்பதில் மாநில அரசு உறுதியாக உள்ளது.

இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண  அரசுப் பள்ளிகள், மாநகராட்சி பள்ளி கள், நகராட்சி பள்ளிகள், ஆதிதிராவி டர், பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர்மரபினப் பள்ளிகள், வனத்  துறை பள்ளிகள் ஆகிய பள்ளிகளில், 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று  நீட் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கு பிரத்யேகமாக ஒரு உள் ஒதுக்கீடு கொடுக்க வகை செய்யும் சிறப்புச் சட்டம்  ஒன்றை இயற்ற அரசு பரிசீலித்து வரு கிறது. இச்சட்டத்தை இயற்றுவதற்கு வகை செய்ய தேவைப்படும் அனைத்து புள்ளி விவரங்களையும் தொகுத்து உரிய பரிந்துரையையும் தமிழ்நாடு அரசுக்கு வழங்க, ஓய்வுபெற்ற ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில், ஒரு ஆணையம் அமைக்கப்படும்.  அந்த ஆணையத்தில், பள்ளிக் கல்வி, மக்கள் நல்வாழ்வு, சட்டம் ஆகிய  துறைகளின் அரசுச் செயலாளர்க ளும், பள்ளிக்கல்வித் துறையினால்  நியமிக்கப்படும் 2 கல்வியாளர்களும் உறுப்பினர்களாக இருப்பார்கள். மருத்துவக் கல்வி இயக்குநர் இவ்வா ணையத்தின் உறுப்பினர்செயலராக செயல்படுவார். பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் குறைந்த அளவிலேயே சேர்வதற்கான காரணங்களை ஆராய்ந்து, அவர்களின் சமூக பொருளா தார நிலையினை மதிப்பீடு செய்து, இந்நிலையை சரி செய்ய,அரசு எடுக்க  வேண்டிய நடவடிக்கைகளை இந்த ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்யும். தனது பரிந்துரையை ஒரு மாத  காலத்திற்குள் இவ்வாணையம் அரசுக்கு சமர்ப்பிக்கும்” என்றார்.

;