tamilnadu

img

வள்ளுவக்குடி, நிம்மேலி கிராமங்களில் வளர்ச்சி திட்டப் பணிகள் ஆய்வு

வள்ளுவக்குடி, நிம்மேலி கிராமங்களில் வளர்ச்சி திட்டப் பணிகள் ஆய்வு

மயிலாடுதுறை, ஜுன் 4 - மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டாரத்திற்குட்பட்ட வள்ளுவக்குடி, நிம்மேலி ஆகிய கிராமங்களில் நடை பெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் ஆய்வு மேற்கொண்டார். சீர்காழி வட்டாரத்திற்குட்பட்ட வள்ளுவக் குடி கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் ரூ.79 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு  வரும் ஆரம்ப சுகாதார நிலைய புதிய  கட்டடத்தை மாவட்ட ஆட்சியர் பார்வை யிட்டு, கட்டுமானப் பணிக்கு பயன்படுத்தப்ப டும் செங்கல், சிமெண்ட், மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் தரத்தினை ஆய்வு செய்தார்.  தொடர்ந்து, வள்ளுவக்குடி கிராமத்தில் செயல்பட்டு வரும்  அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தை  பார்வையிட்டு, பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வரும்  மருத்துவ சேவைகளை ஆய்வு செய்து, அங்கு சிகிச்சை பெற  வந்த பொதுமக்களிடம் குறை களை கேட்டறிந்தார். பின்னர், வள்ளுவக்குடி கிராமத்தில் உள்ள  ஊராட்சி செயலகத்தில், ஊராட்சி யில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணி களின் விவரங்களை ஆய்வு செய்தார்.  தொடர்ந்து, நியாய விலைக் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களின் தரம் மற்றும் தற்போது இருப்பு விவரங்களை ஆய்வு செய்தார். நிம்மேலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். ஆய்வின்போது, சீர்காழி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமுருகன், சரவணன்  மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் உட னிருந்தனர்.