சென்னை,ஜன.18- சேலம் - ஓமலூர் தாலுக்கா கருப்பூரை சேர்ந்த தலித் மாற்றுத்திறனாளி சேந்த மங்கலம் காவல்துறை விசாரணையில் தாக்கப்பட்டு மரணமடைந்த ஏ. பிரபாகரன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்து வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி முதலமைச்சர் அறிவித்துள்ளதற்கு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் தலைவர் பா. ஜான்சிராணி, பொதுச்செயலாளர் எஸ். நம்புராஜன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: பிரபாகரன் மரணம் தொடர்பான குற்றத்தில் 3 பேர் மட்டும் இதுவரை தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது போதுமானது அல்ல. இதில் சம்பந்தப்பட்ட உதவி காவல் கண்காணிப்பாளர், ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகளையும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்து குற்ற நடவ டிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும். காவல் விசாரணையில் தாக்கப்பட்டு மரணமடைந்த பிரபாகரன் (எஸ்.சி) , அவருடைய மனைவி ஹம்சாலா (எஸ்.டி) இருவரும் பட்டியலின வகுப்பை சேர்ந்த வர்கள். எனவே எஸ்.சி, எஸ்.டி வன்கொடு மை, கொலை குற்ற பிரிவுகளில் குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும். ஜனவரி 8 அன்று மாலை 3 மணி அளவில் கருப்பூரில் உள்ள பாதிக்கப்பட்ட தம்பதியர் வீட்டில் புகுந்து தாக்கி, எந்த சட்ட விதிகளையும், மனித உரிமை விதிகளையும் மதிக்காமல், 100 விழுக்காடு பாதிக்கப்பட்ட மாற்றுத்திற னாளியை அடித்து இழுத்துச் சென்றதை அப்பகுதியில் உள்ள மக்கள் சுமார் 30 பேர் திரண்டு நின்று வேடிக்கை பார்த்துள்ள னர். இந்நிலையில் ஜனவரி 11 ஆம் தேதி தான் கைது செய்ததாக காவல்துறை இப்போதே பொய்யான செய்தியை பரப்பி வருகின்றனர். இப்படிப்பட்ட காவல்துறை யினர் அதிகாரிகளாகவும் இருப்பதால் சிபிசிஐடி விசாரணைகூட நேர்மையாக நடைபெறவிடாமல் தடுப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. எனவே, குற்றம் புரிந்த காவல்துறையினரை உடனடியாக கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்துவிட்டு விசாரணையை துவக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஒருவருக்கு உடனடியாக அரசு வேலை வழங்கிடவும், அதுவரையிலும் வன்கொடுமை தடுப்பு சட்ட விதிகளின்படி, வாழ்வாதாரம் மற்றும் வழக்கு நடைபெற்று முடியும் வரை போக்குவரத்து உதவித் தொகை உள்ளிட்டவை மாவட்ட நிர்வாகம் வழங்கிடவும் உத்தரவிட வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்ட விதிகளின்படி பாதிக்கப்பட்ட குடும்பத்தின் சார்பாக சிறப்பு பப்ளிக் பிராசிகியூட்டர் வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும். ஏதாவது விரைவு நீதிமன்றம் ஒன்றில் வழக்கை விரைந்து நடத்தி சம்பந்தப் பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்கவும், அரசுக்கு ஏற்படும் கலங்கத்தை துடைக்கவும் ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.