தருமபுரி, ஜன.29- ஓய்கூதியர்களுக்கான குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கத்தின் 2 ஆவது மாநில பிரதிநிதித்துவப் பேரவை தருமபுரியில் நா.முனியாண்டிசாமி நினைவரங்கத்தில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் ச.ராமமூர்த்தி தலைமை வகித்தார். கவுரவ தலைவர் மு.பரமேஸ்வரன் முன்னிலை வகித் ்தார். வரவேற்ப்பு குழு தலைவர் ஆர்.ஆறுமுகம் வரவேற்றார். மாநிலத் துணைத் தலைவர் இரா.சுப்பிரமணியம் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் கோ.பழணியம்மாள் மாநாட்டைதுவக்கி வைத்து பேசினார். மாநிலபொதுச்செயலாளர் பா.ரவி, மாநிலபொருளாளர் மு.மகாலிங்கம் ஆகியோர் அறிக்கையை முன் மொழிந்து பேசினர்.
தீர்மானங்கள்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வூதி யர்களுக்கான குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். நிறுத்தி வைக்க ப்பட்ட 14 சதவிகித அகவிலைப்படியை 2021 ஜூலை 1ம் தேதி முதல் கணக் கீட்டு வழங்க வேண்டும். மாவட்டம் தோறும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஓய்வூதியர் குறை களைவு கூட்டம் நடத்திய ஓய்வூதியர்்களின் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். ஓய்வூதி யர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ஒரு முறை கட்டணமில்லா முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள வழி வகை செய்ய வேண்டும். குறைந்த பட்ச ஓயவூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங் ்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, இந்நிகழ்வை டி.என்.ஆர்.டி.எஸ்.ஒ.ஏ மாநிலத் தலைவர் அ.கென்னடிபூபாலராயன், மாவட்ட கருவூல அலுவலர் சி.சுப்பிர மணியன், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி த்துறை அலுவலர் சங்க மாநில பொதுச்செயலாளர் ச.பாரி , மாநிலத் ்தலைவர் கே.ஆர்.அப்பாவு ஆகி யோர் வாழ்த்தி பேசினர். தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாநில பொதுச்செயலாளர் பி.கிருஷ்ண மூர்த்தி நிறைவுறையாற்றினார். வரவேற்புகுழு செயலாளர் எம்.பாபு நன்றி கூறினார்.