tamilnadu

img

நான்கு வழி பாதை அமைக்க வலியுறுத்தி வாலிபர் சங்கத்தினர் கையெழுத்து இயக்கம்

கும்மிடிப்பூண்டி, பிப்.18- கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் நான்கு வழி  பாதை அமைக்க வேண்டும் என  வலியுறுத்தி 6  ரயில் நிலையங்களில், 1 லட்சம் பேரிடம் கையெழுத்துகளை வாங்கும் இயக்கத்தை  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திங்களன்று  (பிப் 17),  துவக்கியு ள்ளனர். கும்மிடிப்பூண்டி, கவரைப்பேட்டை, பொன்னேரி, அனுப்பப்பட்டு, மீஞ்சூர், அத்தி ப்பட்டு,  ஆகிய 6 ரயில் நிலையங்களில் கையெழுத்துக்கள் பெறப்பட்டுவருகிறது. இந்த இயக்கத்திற்கு வாலிபர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ப.லோகநாதன் தலைமை தாங்கினார். வாலிபர் சங்க முன்னாள் மாநில செயலாளர் ஆர்.வேல்முரு கன் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். கவரைப்பேட்டையில் வசந்த்பௌத்தன் தலைமையில் தவிச மாநில செயலாளர் பி.துளசிநாராயணன், சிஐடியு நிர்வாகி ஜி.சூரியபிரகாஷ்,வாலிபர் சங்கத்தின் மாவட்ட முன்னாள் செயலாளர் எஸ்.கோபால், சீனு, டிக்சன், பொன்னேரியில் பகுதி செயலாளர் கே.ஜெகன் தலைமை யில்  மாவட்ட நிர்வாகிகள் டி.மதன், ஆர்.சந்துரு,அனுப்பம்பட்டில் பகுதி நிர்வாகி சஞ்சய் தலைமையில் மாவட்ட துணைத் தலைவர் ஜெய்கணேஷ் , மீஞ்சூர் பகுதி செயலாளர் ஆர்.அகிலன் தலைமையில் சிஐடியு மாவட்ட தலைவர் கே.விஜயன், அத்திப்பட்டில் பகுதி தலைவர் வினாயக மூர்த்தி ஆகியோர் தலைமையில் பொது மக்கள் ஆர்வமுடன் கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்தனர்.