tamilnadu

img

சிப்காட் அமைக்க எதிர்ப்பு : 100 வது நாளில் நூதன போராட்டம்!

திருவண்ணாமலை மாவட்டம் பாலியப்பட்டு ஊராட்சியில் விளை நிலங்களில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க அரசு அதிகாரிகள் நிலத்தை தேர்வு செய்து வருகிறார்கள். விளை நிலத்தில் சிப்காட் அமைக்கும் திட்டத்தை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும் என்று சிப்காட் எதிர்ப்பு விவசாய மக்கள் இயக்கம்  சார்பில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இதில் போராட்டத்தின் 100ஆவது நாளான வியாழனன்று (மார்ச் 31) சீர்வரிசை தட்டுகளுடன் கிராம மக்கள் ஊர்வலமாகச் சென்று கோட்டாட்சியர் பிரியதர்ஷினியிடம் மனு கொடுத்தனர். சிப்காட் எதிர்ப்பு இயக்க விவசாயிகள் சங்க நிர்வாகிகள் வழக்கறிஞர் எஸ்.அபிராமன், இல.அழகேசன், எஸ்.பலராமன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.