tamilnadu

குமரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை சீர்குலைத்த பாஜக

நாகர்கோவில், மார்ச் 6- குமரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்கு கள் அடிப்படையில் இரண்டு பேரூ ராட்சிகளில் மட்டுமே பெரும்பான்மை இடங்களை பெற்றிருந்தது பாஜக. ஆனால், வடமாநிலங்களில் சட்ட மன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்ததுபோல் 8 பேரூ ராட்சிகளை கைப்பற்றியுள்ளது. அந்த  கட்சி. இதன் மூலம் நகர்ப்புற உள்ளாட்சி  தேர்தலை குமரி மாவட்டத்தில் கேலிக் கூத்தாக்கி சீர்குலைத்துள்ளது பாஜக. இது சில அரசியல் கட்சிகளில் குழப்பத் தையும், வாக்காளர்கள் மத்தியில் அவ நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்.19 ஆம் தேதி பதிவான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குகள் 22 ஆம் தேதி எண்ணப் பட்டன. அதில் நாகர்கோவில் மாநக ராட்சி, 4 நகராட்சிகள் மற்றும் 51  பேரூராட்சிகளில் 47 ல் திமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களை பெற்றி ருந்தது. பாஜகவுக்கு மண்டைக்காடு, இரணியல் ஆகிய 2 பேரூராட்சிகளில் மட்டுமே பெரும்பான்மை இருந்தது. தமிழ்நாட்டில் வேறெங்கும் வெற்றி பெற முடியாத பாஜக கன்னியாகுமரி மாவட்டத்தில் தனது தேர்தல் விபரீத விளையாட்டை தொடங்கியது. நாகர் கோவில் மாநகராட்சியில் 11 கவுன்சிலர் களை மட்டும் கொண்டிருந்த பாஜக  அதிகாரத்தை பிடித்துவிடும் என்கிற  அளவுக்கான  பரபரப்பை ஏற்படுத்தி யது. அதற்கு துவக்கமிட்டது முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன்.

இதுகுறித்து நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், ‘அனைத்து கவுன்சிலர்களும் மனச்சாட்சிப்படி வாக்களிக்க வேண்டும்’ என கூச்சமே இல்லாமல் சீர்குலைவுக்கான விதை தூவினார். ஒரு கட்சியில் இருந்து வெற்றி பெற்று வந்தவர்களை இன் னொரு கட்சிக்கு ஆதரவாக வாக்க ளிக்க கோருவது அந்த கட்சியின் கட்டுப் பாட்டை மீறியது ஆகாதா; அது நியா யம் தானா, என்று கேள்வி எழுப்பி யதற்கு, கட்சித் தாவலையே நியாயப் படுத்தியிருந்தார். தங்களது வழிகாட்டி யான முன்னாள் அமைச்சர் சொன்னதை செய்துகாட்ட களத்தில் இறங்கினார்கள் பாஜகவினர்.

தடம் மாறிய கவுன்சிலர்கள்

நாகர்கோவில் மாநகராட்சி உட்பட பல இடங்களில் திமுகவுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஆளும்  கட்சியிலேயே தடம்மாறி பாஜகவுக்கு வாக்களித்தனர். திமுக கூட்டணி 32 வார்டுகளை கைப்பற்றி இருந்த நிலை யில் மேயராக திமுகவின் மகேஷ் வெற்றிபெற 28 வாக்குள் மட்டுமே கிடைத்தன. பாஜக 24 வாக்குகள் பெற்றுள்ளது.  குழித்துறை நகராட்சியில் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பெர்லின் ஷீபாவை  அக்கட்சியின் நகர செயலாளர் பொறுப்பில் உள்ள  பொன்.ஆசைத்தம்பியே   தோற்கடித்து பாஜகவின் ஆதரவுடன் வெற்றிபெற் றார். இதுபோல் குளச்சல் நகராட்சி தலைவருக்கு திமுக அறிவித்த ஜான் சனை திமுக கவுன்சிலர் நசீர் தோற் கடித்தார். பேரூராட்சிகளில் சில இடங் களில் திமுக, காங்கிரஸ், பாஜக கவுன்சி லர்கள் தங்களுக்குள் வாக்களித்து தலைவராகவோ துணை தலைவராக வோ வெற்றி பெற்றுள்ளனர்.

அதன்படி இடைக்கோடு பேரூ ராட்சியில் தலைவராக பாஜக  வெற்றி பெற திமுக கவுன்சிலர்கள் உதவியுள்ளனர். பளுகலில் திமுக வெற்றி பெற பாஜகவினர் ஆதரவளித்துள்ளனர். பொன்மனை, திங்கள் நகர், குமாரபுரம், பாலபள்ளம் ஆகிய 4 பேரூராட்சிகளை பாஜக துணையுடன் காங்கிரஸ் கைப்பற்றி யது. கணபதிபுரம், தென்தாமரை குளம் பேரூராட்சிகளை காங்கிரஸ் துணை யுடன் பாஜக கைப்பற்றியது. தனிப் பெரும்பான்மை பெற்ற இரணியல் பேரூராட்சியில் பாஜக போட்டி வேட்பா ளரிடம் குலுக்கல் முறையில் வெற்றி பெற்றுள்ளது. இறுதியாக இரணியல், இடைக்கோடு, கணபதிபுரம், மண்டைக்காடு, புதுக்கடை, தென் தாமரைகுளம், வில்லுக்குறி, வெள்ளி மலை 8 பேரூராட்சிகளில் தலைவர் பதவியை பாஜக பிடித்துள்ளது.

பணபலத்தால் முந்திய பாஜக

வாக்காளர்கள் தேர்வு செய்த கவுன்சிலர்களின் எண்ணிக்கை அடிப்ப டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கூட்டணியில் பெரும்பான்மை கிடைத்த கடையால், அருமனை, பாகோடு பேரூராட்சிகளில் சிபிஎம் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். திற்பரப்பு பேரூராட்சியில் சிபிஎம் தனது 5 உறுப்பினர்களின் ஆதரவை 4  உறுப்பினர்களைப் பெற்றிருந்த காங்கிரசுக்கு அளித்தது. அதன்மூலம் 8 உறுப்பினர்கள் இருந்த பாஜகவை அதிகாரத்துக்கு வரவிடாமல் தடுத்தது.  மாவட்டம் முழுவதும் பாஜக 2 பேரூ ராட்சிகளில் மட்டும் பெரும்பான்மை பெற்றிருந்த நிலையில் பண பலத்தால் 8 பேரூராட்சிகளில் ‘வெற்றி’ பெற்றுள் ளது. ஆனாலும், கடந்த தேர்தலில் பெற்றதில் (13) மூன்றில் இரண்டு பங்கு இடங்களில் மட்டுமே பாஜகவால் வெற்றி பெற முடிந்துள்ளது. அதுவும் நெறிமுறைகளுக்கு புறம்பாக பெறப்பட்ட வெற்றி.