tamilnadu

உலகச் செய்திகள்

இந்தோனேசியாவின் அடுத்த பொதுத் தேர்தல் பிப்ரவரி 14, 2024 அன்று நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர் கள் கலந்து கொண்ட பல கூட்டங்களுக்குப் பிறகு இந்தத் தேதி இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாகாணத் தேர்தலுக்கும் தயாரிப்புகளை மேற்கொள்ள இந்த முடிவு உதவி செய்யும். பொதுத் தேர்தலில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பல்வேறு சட்டமன்றங்களுக் கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஒருவேளை ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடை யில் மோதல் போக்கு அதிகரித்தால், அமெரிக்கா தலைமையிலான ராணுவக்கூட்டணியான நேட்டோவில் இருந்து படைகளை விலக்கிக் கொள்வோம் என்று குரோஷியா அறிவித்துள்ளது. இந்த எச்சரிக்கையை குரோஷியாவின் ஜனாதிபதி ஜோரன் மிலானோவிச் விடுத்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், மோதல் அதிகரித்தால், படையை அனுப்ப மாட்டோம். மாறாக, கடைசி படைவீரர் வரையிலும் திரும்பப் பெறப்படுவார்கள் என்றார். 

ஈரானும், அதன் அண்டை நாடுகளும் என்ற தலைப் ்பில் ஒரு மாநாட்டை ஈரான் ஏற்பாடு செய்திருந் தது. அண்டை நாடுகளுடனான ஈரானின் புதிய அணுகு முறையை விளக்கிச் சொல்லவே இந்த மாநாட்டை நடத்தி னார்கள். தங்கள் நோக்கத்தை விளக்கிய ஈரானிய அதிகாரிகள், மேற்கு ஆசியப் பகுதியில் வெளிநாட்டுப் படைகள் நிறுத்தப்படுவதை நாங்கள் எதிர்க்கிறோம். அது சீர்குலைவையே உருவாக்குகிறது என்று தெரிவித்த னர். அண்டை நாடுகளும் இக்கருத்தையே கொண்டிருப் பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.