பஹல்காம் தாக்குதலுக்கு அஞ்சலி கருப்பு பட்டையுடன் இந்திய மகளிர் அணி
ஜம்மு-காஷ்மீர் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று பயங்கரவாதி கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில், இந்த தாக்குத லில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஞாயிற்றுக் கிழமை அன்று இலங்கை அணிக்கெதி ரான முத்தரப்பு தொடரின் ஆட்டத்தில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினார்கள். இலங்கையில் நடைபெற்று வரும் இந்த ஒருநாள் முத்தரப்பு தொட ரில் தென் ஆப்பிரிக்கா - இந்தியா - இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2025 சென்னையில் டிக்கெட் விற்பனை மந்தம்
நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் சென்னை அணி தொடர் சொதப்பலால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் முதல் அணியாக வெளியேறியது. இன்னும் சென்னை அணிக்கு 5 லீக் ஆட்டங்கள் உள்ள நிலையில், புதன்கிழமை அன்று சென்னை - பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை மிகவும் மந்தமான விற்று தீர்ந்துள்ளது. வழக்கமாக சென்னை அணியின் போட்டிக்கான டிக்கெட் விற்பனை வெறும் 30 நிமிடத்தில் முடிந்துவிடம். ஆனால் தற்போது டிக்கெட் விற்பனை முடிய 3 மணி நேரமாகி வருகிறது. தொடர் தோல்வியால் டிக்கெட்டுகளை வாங்கும் ஆர்வம் சென்னை ரசிகர்களிடையே குறைந்துள்ளதே இதற்கு காரணம் ஆகும்.
ஐபிஎல் 2025 இன்றைய ஆட்டம்
ராஜஸ்தான் - குஜராத்
நேரம் : இரவு 7:30 மணி இடம் : மான்சிங் மைதானம், ஜெய்ப்பூர், ராஜஸ்தான் சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)