புதுதில்லி, மார்ச் 7- ஹரியானாவில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் தங்களது பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பர் 8-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். ஹரி யானா பாஜக அரசு கோரிக்கைகளை நிறை வேற்றுவதற்குப் பதில் எஸ்மா உள்ளிட்ட கொடிய சட்டங்களைப் பயன்படுத்தி வருகிறது. பாஜக அரசு அடக்குமுறைகளை நிறுத்தி அங்கன்வாடி பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக சிஐடியு விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- அரசு அறிவித்த ஊதிய உயர்வு,
கொரோனா தொற்று உச்சக்கட்டத்தில் இருந்தபோது தங்கள் உயிரைப் பணயம் வைத்து சிறப்பாக சேவை யாற்றிய பணியாளர்கள் மற்றும் தொழிற்சங்கங் களுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்குப் பதி லாக ஹரியானா அரசு அவர்கள் மீது அடக்கு முறையைக் கட்டவிழ்த்துவிட்டது. அவர்களுக்கு எதிராக எஸ்மாவையும் பயன்படுத்தியுள்ளது. ஹரியானா பாஜக அரசு போராட்டம் தொடங்கிய முதல் நாளிலிருந்தே அடக்குமுறைகளை கட்ட விழ்த்துவிட்டது.
இருப்பினும் வேலைநிறுத்தம் தொடர்கிறது. முதல்வரின் நேரடி உத்தர வின் அடிப்படையில் ஹரியானா காவல்துறை மார்ச் 3-ஆம் தேதி முதல் அடக்குமுறையை தொடங்கிவிட்டது. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை துன்புறுத்தி யும், அச்சுறுத்தியும், கைது செய்துள்ளது. சிஐடியு தேசியச் செயலாளர்கள் ஏ.ஆர்.சிந்து மற்றும் உஷா ராணி மற்றும் அகில இந்திய அங்கன் வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மற்றும் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜிராக்பூர், யமுனாநகர், பஞ்ச்குலா சாலை, பானிபட் சுங்கச்சாவடி, பர்வாலா உள்ளிட்ட பல ஊர்களில் சாலைமறியல் போராட்டமும் நடை பெற்றுவருகிறது. ஹரியானாவில் தீரத்துடன், துணிச்சலாகப் போராடிவரும் அங்கன்வாடி பணி யாளர்கள் மற்றும் உதவியாளர்களின் போராட்ட த்தை சிஐடியு வாழ்த்துகிறது. அதேநேரத்தில் பாஜக அரசு, ஊழியர்களின் மீதான அடக்குமுறைகளை நிறுத்தி, சிறையிலுள்ள அனைத்து ஊழியர்கள் மற்றும் தலைவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்ற அவர்களுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இவ்வாறு சிஐடியு கூறியுள்ளது.