இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உண்ணாவிரத போராட்டம்
திருச்சிராப்பள்ளி, மே 15- காலனி என்ற ஊர் பெயர்களை நீக்கிட தமிழ்நாடு அரசு சட்டமியேற்றுள்ள சூழலில், சாதிப் பெயரில் இயங்கும் பள்ளியின் பெயர்களோடு சேர்த்து திருச்சியில் உள்ள சாதிப் பெயரில் இயங்கும் தெருக்களின் பெயர்களையும் அகற்றக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில் வியாழனன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் பா. லெனின் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சேதுபதி வரவேற்றார். மாநிலச் செயலாளர் சிங்காரவேலன் துவக்கவுரை ஆற்றினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.