உலகின் 127 நாடுகளுக் கிடையேயான சர்வதேச பட்டினி குறியீட்டில் நிகழாண்டில் இந்தியா 105ஆவது இடத்தில் உள்ளது. இதன் மூலம் பட்டினி விஷ யத்தில் தீவிர பகுப்பாய்வுக்கு உட்படுத்தும் பிரிவில் இந்தியா இடம் பெற்றுள்ளது என்பது பெரும் கவலையளிப்பதாக உள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு வெளி யான பட்டியலில் மிகவும் பின் தங்கிய 111ஆவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 105வது இடத்தில் கீழிறங்கி யுள்ளது. உலக நாடுகளில் பசியின் அளவை அளவிடுவதற்கும் கண்காணிப்ப தற்குமான கருவியாக ஊட்டச்சத்து குறைபாடு குழந்தை இறப்பு ஆகியவற்றின் அடிப்படையிலான சர்வதேச பட்டினி குறியீடு அறியப்படுகிறது. இது நிகழாண்டு சர்வதேச பட்டினி குறியீட்டில் பத்தொன்பதாவது பதிப்பு அயர்லாந்து நாட்டை சேர்ந்த மனித நேய அமைப்பான ‘கன்சர்ன் வோல்டுவைட்’ ஜெர்மனி நிறுவனமான பெல்ட் ஹன்ஹர்லைட் ஆகிய அமைப்புகளால் இந்த வாரம் வெளியிடப்பட்டது. குறிப்பாக இதில் உலகின் 136 நாடுகளில் கணக்கெடுக்கப்பட்ட பட்டினிக் குறியீட்டின் அடிப்படையில் 127 நாடுகளுக்கு இடையே தயாரிக்கப்பட்ட தரவரிசையில் 27.3 புள்ளிகளுடன் இந்தியாவிற்கு 105-ஆவது இடம் கிடைத்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய 42 நாடுகளை உள்ளடக்கிய தீவிரமான பகுப்பாய்வு செய்ய வேண்டிய பிரிவுக்குள் இந்தியாவும் நுழைந்துள்ளது. அதே சமயம் நமது அண்டை நாடுகளான வங்க தேசம், நேபாளம், இலங்கை ஆகி யவை நடுத்தர பிரிவின் கீழ் பட்டியலிடப் பட்டுள்ளன.
நான்கு கூறுகள்
குறிப்பாக இந்தியாவின் புள்ளிகள் நான்கு கூறுகளை அடிப்படையாகக் கொண்டதாகும். நாட்டின் மக்கள் தொகையில் 13.7 சதவீதத்தினர் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளனர். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 35.5 சதவீதம் பேர் வளர்ச்சி குன்றி யுள்ளவர்களாகவும் இவர்களில் 18.7 சதவீதத்தினர் எடை குறைந்தவர்களாகவும் உள்ளனர். மேலும் 2.9 சதவீதம் குழந்தை கள் 5 வயது நிறைவடைவதற்கு முன்பே இறந்துவிடுகின்றனர் என்றும் கணக்கிடப் பட்டுள்ளது. குறியீட்டின் கணக்கீட்டில் போது மான கலோரி உட்கொள்ளாத மக்கள் தொகையின் எண்ணிக்கையை ஊட்டச் சத்து குறைபாடு உள்ளவர்களாகவும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக வயதிற்கு குறைந்த உயரம் கொண்ட குழந்தைகளை வளர்ச்சி குன்றிய வர்களாகவும் வரையறுக்கப்பட்டுள்ளது. அதேபோல் உயரத்திற்கு ஏற்ற எடை இல்லாதவர்களை எடை குறைந்த வர்களாகவும் போதிய ஊட்டச்சத்து இன்மை மற்றும் ஆரோக்கியமற்ற சூழல்களின் அபாயகரமான கலவையால் உயிரிழந்த குழந்தைகள் இறந்தவர்களாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் பரிதாப நிலை
இந்த நான்கு கூறுகளின் அடிப்படையில் பட்டினியின் தீவிரத்தை பிரதிபலிக்கும் வகையில் ஒவ்வொரு நாட்டிற்கும் புள்ளிகள் கணக்கிடப்பட்டன. அதில் சிறந்த மதிப்பெண் என்ற வகையில் (பட்டினி இல்லை) 5க்கும் குறை வான மதிப்பெண்களுடன் குறியீட்டில் முதலிடத்தை சீனா, ரஷ்யா, குவைத், ஐக்கிய அரசு அமீரகம் உள்பட 22 நாடுகள் பகிர்கின்றன. இந்த ஆய்வின் அடிப்படையில் 2030-ஆம் ஆண்டிற்குள் ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி இலக்கான பூஜ்ய பட்டினியை அடைவதற்கான வாய்ப்புகள் மிகவும் அரிதாகவே இருக்கிறது. பட்டினியின் எண்ணிக்கையை குறைப்பதற்கான நடவடிக்கைகள் போதுமான அளவில் இல்லாததால் மேலும் பல்லாண்டுகளுக்கு உலகின் ஏழ்மையான நாடுகளில் பட்டினியின் அளவு அதிகமாக இருக்கும். அதில் இந்தியா முதலிடத்திற்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. உணவு உரிமையின் முக்கியத்து வத்தை சர்வதேச சமூகம் தொடர்ந்து வலி யுறுத்தி வந்தாலும் உலகின் பல பகுதிகளில் அது அப்பட்டமாக புறக்கணிக்கப்படுகிறது. அந்த பட்டியலில் இந்தியாவும் தொடர்கிற வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதைத்தான் சர்வதேச பட்டினி குறியீட்டின் ஆய்வுகள் தெளிவுபடத் தெரிவிக்கின்றன.
தொகுப்பு : ஐ.வி.நாகராஜன்
ஆதாரம்: இந்தியன் எக்ஸ்பிரஸ் (13.10.2024)