இந்தியா - பாகிஸ்தான் அரசுகள் போர் பதற்றத்தை தணிக்க வேண்டும்
எழுத்தாளர்கள் - கலைஞர்கள் வேண்டுகோள்!
காஷ்மீர் பஹல்காமில் ஏப்ரல் 22ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்கு எதிராக நாடு ஒரு மித்து எழுப்பிய கண்டனத்தில் இணைந்து நின்ற எழுத்தாளர்களும் கலைஞர்களும் மே 8 வியாழன்அன்று வெளியிட்ட கூட்ட றிக்கை: பஹல்காமில் தாக்குதலுக்குள்ளான வர்களை மீட்பதிலும் பாதுகாப்பதிலும் காஷ்மீரிகள் தீரத்துடன் வெளிப்படுத்திய அக்கறையும் மனிதநேயமும் பயங்கர வாதத்திற்கு எதிரானவை. அமைதியி லும் நாட்டு ஒற்றுமையிலும் அக்கறையு டன் பெரும் பங்காற்றிவரும் காஷ்மீரிக ளுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக அவர்களை பயங்கரவாதிகளுடனும் பாகிஸ்தானுடனும் தொடர்புபடுத்தும் வெறுப்புக் கருத்துக்களை நாங்கள் நிரா கரிக்கிறோம். தீவிரவாதிகள் சுற்றுலாப் பயணிகளின் மத அடையாளத்தைக் கேட்டு உறுதி செய்துகொண்ட பிறகே சுட்டுக் கொன்றதாக பொய்த்தகவலைப் பரப்பி இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப் பைத் தூண்டும் சிலரது முயற்சியை முறியடித்துள்ள இந்திய மக்களின் அறிவுமுதிர்ச்சியான அணுகுமுறையை நாங்கள் மதிக்கிறோம். பாதுகாப்பு நடவடிக்கைகளில் காணப் படும் குறைபாடுகள் உடனடியாக களை யப்பட்டு இனியொரு பயங்கரவாதச் செயல் இந்த மண்ணில் நிகழாது என்கிற நிலையை உறுதிப்படுத்த வேண்டுமென ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம். இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் ஓர் இயங்கு தளமாக இருக்கக்கூடாது என்கிற இந்தியாவின் நிலைப்பாடு சமரசத்தி ற்கு அப்பாற் பட்டது. பஹல்காம் தாக்குத லில் ஈடுபட்ட பயங்கரவாதிகளையும் அவர்களுக்குப் பின்னேயுள்ள நாசகரச் சக்திகளையும் சர்வதேச சமூகத்தின் முன்னால் அம்பலப்படுத்தி தனிமைப் படுத்தவும் தண்டிக்கவும் இந்தியாவுக்கு உரிமையுள்ளது. அத்தகைய நிலையை உருவாக்குவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் இந்தியா பயன்படுத் தும் என்றும், சர்வதேச விசாரணைக்கு முன்வருவதாக பாகிஸ்தான் அறிவித்த நிலையில் அதையும் இந்தியா ஒரு வாய்ப்பாக பயன்படுத்தும் என்றும் எதிர் பார்க்கப்பட்ட நிலையில், இந்திய ராணு வம் 2025 மே 7ஆம் தேதி “ஆபரேசன் சிந்தூர்” என்ற நேரடி நடவடிக்கையை மேற்கொண்டது. (குறிப்பிட்ட ஒரு மதத்த வரின் பார்வையில் பெண்ணின் சுமங்க லித்தன்மையுடன் தொடர்புபடுத்தப்படும் சிந்தூர் - நெற்றித்திலகம் என்று பெயரி டப்பட்டதில் நாட்டின் மதச்சார்பற்ற, பாலினச் சார்புநிலையற்ற பொதுப் படைத்தன்மை வெளிப்படவில்லை என்பதைச் சுட்டிக் காட்டுகிறோம்.) நல்லுறவு, அமைதி மற்றும் மனித குல முன்னேற்றத்தில் நம்பிக்கை கொண்டுள்ள எழுத்தாளர்களும் கலை ஞர்களுமாகிய நாங்கள் இந்தியா பாகிஸ்தானிடையே இப்போது நிலவும் போர்ச்சூழல் குறித்து மிகுந்த கவலை கொண்டுள்ளோம். போர் இருதரப்பிலும் குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவி மக்க ளின் உயிரைப் பறிக்கிறது. மனிதர்கள் இரத்தம் மண்ணில் சிந்துவதைத் தவிர போரின் சாதனை எதுவுமில்லை. போரின் சுமை யாவும் பொதுமக்களின் மீது விழும். போர் எளிய மக்களின் உயிர் மற்றும் உடமைகளை அழித்து மீளாத்துயரத்தை தரக்கூடியது. போர் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது. அதன் தாக்கம் அத்தியாவசி யப் பொருட்களின் விலையேற்றம், பொரு ளாதாரப் பின்னடைவு, மற்றும் தீராத அமைதியின்மைக்குள் நாட்டைத் தள்ளி விடும். மதரீதியான மோதல்களுக்கும், வெறுப்பரசியலுக்கும் வழிவகுத்துவிடும் எனக் கடந்தகால அனுபவங்களிலிருந்து கவலைகொள்கிறோம். போரினால் உலகளாவிய அளவில் ஏற்பட்ட இழப்புகளைக் கவனத்தில் கொண்டு, இருநாட்டு அரசுகளும் போர் பதற்றத்தை தணிக்கவேண்டும் என்றும் சட்ட ரீதியாகவும் தூதரக மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் மூலமும் தீர்வு காண வேண்டும் என்றும் கோருகிறோம். போருக்கு எதிராக அமைதியைக் கோரு வது சமூக அக்கறை கொண்ட அனைவ ரது கடமை. நாட்டின் எல்லைகளைத் தாண்டி மனிதநேயம் மற்றும் மனிதவுரி மைகளுக்காக உயர்கிறது எமது குரல். மேற்கண்ட கூட்டறிக்கையில், எஸ்.வி.ராஜதுரை, து.ரவிக்குமார் எம்.பி., கலாப்ரியா, வண்ணதாசன், பெருமாள் முருகன், இமையம், மதுக்கூர் ராம லிங்கம், ஆதவன் தீட்சண்யா, இயக்கு நர்கள் சீனு.ராமசாமி, கமலக்கண்ணன், ரோகிணி, ஓவியர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் என 110 பேர் கையெழுத் திட்டுள்ளனர். இந்த கூட்டறிக்கைக்கு இயக்குநர்கள் த.செ.ஞானவேல், பா.ரஞ்சித் ஆகியோரும் ஒப்புதல் தெரி வித்துள்ளனர்.