tamilnadu

img

வாயில்லா பூச்சிகளா அருந்ததிய மக்கள்?

நாங்கள் இருக்கிறோம் : பெ.சண்முகம்  ஆவேசம்

ஈரோடு, ஏப். 11-  புன்செய்புளியம்பட்டி வாரச்சந்தை யில் 50 ஆண்டுகளுக்கு மேலாக அருந்த திய மக்கள் நடத்தி வந்த மாட்டிறைச்சிக் கடைகளை எவ்வித முன் அறிவிப்பும் இன்றி நகராட்சி நிர்வாகம்  தடை செய்து, இடித்து தரைமட்டமாக்கியது. இதனை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இப்போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்ய பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தி நகராட்சி நிர்வாகம் 4 மாதங்களாக இழுத்தடித்து வந்த நிலையில், குடி யேறும் போராட்டத்திற்கு தேதி குறிக்கப் பட்டது. ஏப்ரல் 11 செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் காலவரையற்ற குடியேறும் போராட்டம் திட்டமிட்டபடி தொடங்கியது.  கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில உதவி தலைவர் யு.கே.சிவஞானம் ஆகியோர் போராட்டத்திற்கு தலைமையேற்றனர்.  முன்னதாக நகராட்சி அலுவலகம் முன் தொடங்கிய போராட்டத்தை கலை த்து கைது செய்ய காவல்துறையினர் முய ன்றனர். அலுவலகத்தினுள் அனுமதிக்கா மல் தடுப்புகளை அமைத்து தடுத்தனர். ஆனால், போராட்டக்காரர்கள், காவல் துறையினரின் தடுப்புகளை தகர்த்து நகராட்சி அலுவலக வளாகத்திற்குள் சென்று உள்ளே அமர்ந்து போராட்டத் தில்  ஈடுபட்டனர். இந்த சமயத்தில் சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகத் திற்கு கை மற்றும் காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர், மருத்து வமனையில் முதலுதவி சிகிச்சை எடுத்துக்கொண்டு மீண்டும் போராட்டக் களத்திற்கு வந்தார். 

சாதிய பாரபட்சத்தை அனுமதிக்கலாமா?

இதனைத்தொடர்ந்து  பெ.சண்முகம் பேசுகையில், “கடந்த 4 மாத காலமாக மிகுந்த நிதானத்தோடு இந்த பிரச்சனை யை அணுகி வந்தோம். ஆணையர்  நடத்திய அனைத்து பேச்சுவார்த்தை களிலும் கலந்து கொண்டுள்ளோம். இப்பிரச்சனையில் யார் யார் எல்லாம்  தலையிட்டால், இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமோ அவர்கள் அனை வரையும் அணுகி அமைதியாகத் தீர்வு காணும் வகையில் போராட்டத்தை  நடத்தி வந்தோம். ஆனால், முதல்வர் வரை பிரச்சனையை கொண்டு சென்ற பிறகும் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வில்லை. ஆகையால் இன்றைய தினத்தில் நகராட்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தை நடத்துவது என்று முடிவு செய்தோம்.   பட்டியலின மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மிகவும் வருத்தத்துடனும், வேதனையுடன் உள்ளனர் என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறோம்.

இந்த பிரச்ச னைக்கு காரணமான நகராட்சி துணைத் தலைவர் சிதம்பரம், தமிழக அரசுக்கும், திமுக தலைமைக்கும் கட்டுப்பட மறுக் கிறார் எனில் அவர் ஏன் பதவியில் நீடிக்க வேண்டும்? சாதிய பாரபட்சத்தோடு நடந்து கொள்கிற ஒருவர் தேர்ந்து எடுக்கப் பட்ட பதவியில் நீடிக்க முடியாது. உடனடி யாக அவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.  50 ஆண்டு காலத்திற்கு மேலாக மாட்டி றைச்சிக்கடை அங்கே நடந்து வருகிறது. திடீரென்று நகராட்சி நிர்வாகம் அவற்றை அப்புறப்படுத்துகிறது.  முன்கூட்டியே நோட்டீஸ் கொடுக்கப்படவில்லை. அத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்ட அனைவர் மீதும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். அருந்ததிய சமுதாய மக்கள் வாயில்லா பூச்சிகள் தானே; அவர்களுக்காக யார் வரப்போகி றார்கள் என்ற ஆணவத்தில் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அருந்ததிய மக்களின் வாழ்வாதார  உரிமையை பாதுகாக்க நங்கள் இருக்கிறோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,  தீண்டாமை ஒழிப்பு முன்னணி உறுதியாக களத்தில் நிற்கும், உரிமை களை மீட்டுக்கொடுக்கும். 

அனுமதி அளிப்பீர்!

நகராட்சிக்கு சொந்தமான சந்தை யில் இங்கு வசிக்க கூடிய மக்களுக்கு உரிமை இருக்கிறதா இல்லையா ? 26 ஏக்கர் உள்ள சந்தையில் பட்டியலின மக்களுக்கு இட ஒதுக்கீட்டின்படி 6 ஏக்கர் அளந்து கொடுக்க வேண்டும். மற்ற  இறைச்சிக் கடைகள் நடக்கும் இடத்தில் மாட்டிறைச்சி கடைகள் நடத்தக் கூடாது என்றால் அது சாதிய ரீதியிலான அணுகு முறையைத் தவிர வேறு என்ன? எனவே  இந்த சாதிய ரீதியிலான அணுகுமுறை யை அனுமதிக்க முடியாது. நகராட்சிச் சந்தையில் அதே இடத்தில் கடை நடத்த  அனுமதி கொடுங்கள். இல்லை என்றா லும் கடை  அங்கே நடக்கும்.  இந்த தொடர் காத்திருப்புப் போராட்டத் தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகு ராமன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாவட்டத் தலைவர் பி.பி.பழனி சாமி, செயலாளர் எம்.அண்ணாதுரை, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ப.மாரிமுத்து, ஏ.எம்.முனுசாமி,  பி.பரமசிவம், சி.முரு கேசன்,  கே.ஆர்.விஜயராகவன், ஆர். கோமதி, மூத்த தோழர்கள் கே.துரை ராஜ், கே.ஆர்.திருத்தணிகாசலம் , கே.மாரப்பன், மாதர் சங்க தலைவர் பி.எஸ்.பிரசன்னா, செயலாளர் பா.லலிதா, மாணவர் சங்க செயலாளர் ரஞ்சித், வாலிபர் சங்க செயலர் வி.எ. விஸ்வநாதன், விதொச  செயலாளர் சண்முகவல்லி, விச மாவட்டத் தலை வர் எஸ்.வி.மாரிமுத்து, சிபிஎம்  மாவட்டக் குழு உறுப்பினர்கள் மற்றும் புளியம்பட்டி ஒன்றியச் செயலாளர் டி.சுப்பிரமணி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.  (ந.நி.)