tamilnadu

img

பாரம்பரிய அனுபவ சித்த மருத்துவத்தைக் காக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை தேவை!

மதுரை, ஏப். 22 - பாரம்பரிய அனுபவ சித்த மருத்து வத்தின் தங்குதடையற்ற வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள தமிழக முதல்வருக்கு இந்திய இயற்கை முறை சிகிச்சை கவுன்சில் (ஐஎன்டிசி) மாநாடு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐஎன்டிசி அமைப்பின் 9ஆவது கோரிக்கை மாநாடு ஏப்ரல் 10 அன்று மதுரையில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் டாக்டர் சி.ஜெயக்குமார் வர வேற்புரையாற்றினார். அமைப்பின் நிறுவனர் டாக்டர் ரவி தலைமையுரை யாற்றினார். கன்னியாகுமரி தொகுதி  நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த்  சிறப்புரையாற்றினார். ஐஎன்டிசி அமைப்பின் தேசிய செயலாளர் டாக்டர் அருண் சின்னையா, தேசிய துணைத் தலைவர் டாக்டர் ஜெயச்சந்திரன் ஆகி யோர் கருத்துரையாற்றினர். மதுரை வடக்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் கே.தனபாலன், வழக்கறிஞர் விஸ்வ நாத், பேராசிரியர் பத்மநாபன் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். விருது நகர் அம்மன் கலைக்குழுவின் சார்பில்  இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. மாநாட்டில் அமைப்பின் தலைவர் டாக் டர் ச.வெங்கடாசலம் மற்றும் தமிழகத் தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பாரம்பரிய மருத்துவர்களும், மாற்று மருத்துவ உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

பாரம்பரிய சித்த மருத்துவம்

இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு : பாரம்பரிய சித்த மருத்துவ அங்கீகா ரத்திற்கான போராட்டம் ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கியது. இன்னும் முடியவில்லை. மரபுமுறை சித்த மரு த்துவம் என்பது ஆங்கில மருத்துவம் போல முழுக்க முழுக்க ஓர் கல்விப்புல (Faculty) மருத்துவம் அல்ல. பரம்பரை யாகவும், அனுபவத்தளத்திலும், குடும்ப அனுபவ அறிவுச் சொத்தாகவும் பாதுகாக்கப்பட்டு வரும் அறிவு முறைக் களஞ்சியமாகும். அதனால் கல்லூரியில் சென்று பயிலவில்லை என்ற காரணத் தைக் கொண்டு அவர்கள் மருத்துவர்கள் இல்லை என்று புறக்கணிக்கஇயலாது. தமிழக எல்லைக்குட்பட்டு, பாரம் பரியமாகப் பேணிக்காக்கப்பட்டு வரும் சித்த மருத்துவத்தையும், சித்த மருத்து வத்தைப் பின்பற்றி வாழ்க்கை அமைத்துக் கொண்டவர்களையும் பாது காக்கும் பொருட்டு 1997-இல் தமிழக சட்ட மன்றத்தில் தமிழ்நாடு சித்த மருத்துவ முறை (வளர்ச்சி மற்றும் மருத்துவர் பதிவு) சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1998-இல் பாரம்பரிய அனுபவ சித்த மருத்து வர்கள் ஆர்எஸ்எம்பி (RSMP) என்று பதிவு பெற்றனர். இதுபோன்ற அங்கீகாரத்தை மீண்டும் சட்டப்பூர்வமாக வழங்கி பல்லா யிரக்கணக்கான பாரம்பரிய அனுபவ சித்த மருத்துவத்தின் தங்குதடையற்ற வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமான நட வடிக்கைகளை தமிழக முதல்வர் மேற் கொள்ள வேண்டும்.

அக்குபஞ்சர்

அக்குபஞ்சர் மருத்துவத்திற்கு தனித்த, முழுமையான மருத்துவ முறை என்று சட்டரீதியான அங்கீகாரம் இந்திய அரசு வழங்கியுள்ளது. மகாராஷ்டிரா மாநில அரசு அக்குபஞ்சர் மருத்து வத்திற்கு மாநில அளவிலான தனி கவுன் சிலை ஏற்படுத்தி, அக்குபஞ்சர் மருத்து வர்களுக்கு அரசு பதிவு அளித்து நெறியாக்கம் செய்து வருகிறது. தமிழ்நாட்டில் சுமார் ஒரு லட்சத்திற் கும் மேற்பட்ட தகுதி உடைய அக்கு பஞ்சர் மருத்துவர்கள் மருத்துவத் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் அக்கு பஞ்சர் மருத்துவ முறையின் வளர்ச்சி க்கும், அக்குபஞ்சர் மருத்துவர்களின் சட்டப்பூர்வ அங்கீகாரத்திற்கும் வழி அமைக்கும் வண்ணம் அக்குபஞ்சர் மருத்துவக் கவுன்சில் மாநில அளவில் உருவாக்கி, நெறியாக்கம் செய்திடவேண்டும்.

தனிக் கவுன்சில் தேவை

ஆயுஷ் மருத்துவங்களுக்கு அப்பால் மக்களின் அதிகளவு பயன்பா ட்டிலுள்ள மாற்றுமுறை மருத்துவங் களின் வளர்ச்சிக்கு உதவும் வண்ணம் நமது மாநில அரசு தனிக்கவுன்சில், தனி இயக்குநரகம் போன்றவற்றைச் சட்டப் பூர்வமாக அமைத்து, அரசு பதிவேட்டில் பதிவு செய்து தொழிலாற்றக்கூடிய வண் ணம் நெறியாக்கம் செய்திடவேண்டும். தமிழகத்திலுள்ள அனைத்துப் பாரம்பரிய மற்றும் மாற்று மருத்துவ முறை சார்ந்த மருத்துவமனைகளையும் சிகிச்சை மையங்களையும் தமிழக மருத்துவமனைப் பதிவுச் சட்டத்தின் கீழ்  பதிவு செய்யத்தக்க வகையில் தமிழக  மருத்துவமனைப் பதிவுச் சட்டத்தில்  திருத்தங்கள் ஏற்படுத்தி சட்ட விரிவா க்கம் செய்ய உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும்.

ஹோமியோபதியை இணைத்திடுக!

“இல்லம் தேடி மருத்துவம்” எனும் புதிய மக்கள் நல்வாழ்வுத் துறை திட்டம் அறிவித்து, லட்சக்கணக்கான மக்களை இல்லந்தேடிச் சந்தித்து, மருத்துவப் பரி சோதனைகள் செய்து, சிகிச்சை அளித்து வருவதும், இத்திட்டத்தை மென்மேலும் விரிவுபடுத்தி கிராமங்களை நோக்கி நகர்த்துவதுமான மகத்தான சமூக நற் பணிக்காக ஐஎன்டிசி சார்பில் பாராட்டி, நன்றி கூறுகிறோம். அதே சமயம் இத்திட் டத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி, மருத்துவங்களை இணைத்து மக்கள் பயன்பெறச் செய்ய வேண்டும். பழனியில் சித்த மருத்துவக் கல்லூரி அமைக்கும் பணியை விரைந்து முடிக்கவேண்டும்; சித்த மருத்துவத் தின் வளர்ச்சி மற்றும் தேவைக்கேற்ப, முதற்கட்டமாக தமிழகத்தில் 2 மாவட்ட ங்களுக்கு ஒரு அரசு சித்த மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும்.  இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.