tamilnadu

பெண்கள், குழந்தைகள் மீது அதிகரிக்கும் வன்முறைகள்

பெண்கள், குழந்தைகள் மீது  அதிகரிக்கும்  வன்முறைகள்

தமிழகத்தில் தொடரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்த விரைவான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து முறையீடு செய்துள்ளது. சங்கத்தின் அகில இந்திய செயலாளர் பி.சுகந்தி, மாநிலத் தலைவர் எஸ். வாலண்டினா,  மாநில பொதுச் செயலாளர் அ. ராதிகா, பொரு ளாளர் ஜி.பிரமிளா ஆகியோர் மார்ச் 7 வெள்ளி யன்று  சமர்ப்பித்த மனுவில், நாளுக்கு நாள்  அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் குழந்தை கள் மீதான வன்முறைகள் குறித்த கவலையை தெரிவித்துள்ளனர்.  கடந்த 6 மாதங்களில் 92 வழக்குகள்  கடந்த 6 மாத காலத்தில் 26 மாவட்டங்களில்  92 வன்முறை வழக்குகள் சங்கத்தின் கவ னத்திற்கு வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள் ளது. இதில்:      - குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை - 40 வழக்குகள் (பள்ளிகளில் 21)      - பெண்கள் மீதான பாலியல் வன்முறை - 31 வழக்குகள் (மாற்றுத்திறனாளிகள் 4)      - கூட்டு பலாத்காரம் - 6 வழக்குகள்  - எஸ்சி/எஸ்டி வன்கொடுமை - 8 வழக்குகள்  - குடும்ப வன்முறை - 9 வழக்குகள்  காவல்துறையின் மெத்தன போக்கு  கடிதத்தில், பெண்கள் மற்றும் குழந்தை கள் மீதான வன்முறை வழக்குகளில் காவல்துறையின் அணுகுமுறையும், செயல் பாடும் சில இடங்களில் மெத்தன போக்கோடும் கவனமின்மையோடும் இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. விசாரணையின் போதே பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளியாக சித்தரிக்கும் போக்கும் கண்டிக்கப்பட்டுள்ளது.  போதை கலாச்சாரம் முக்கிய காரணம்  கடிதத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகளுக்கு போதை கலாச்சாரம் மிக முக்கிய காரணமாக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“பள்ளி, கல்லூரிகள், பொதுமக்கள் கூடும் இடங்கள், கிராமப்புற, நகர்ப்புறங்கள் என அனைத்து இடங்களிலும் போதைப் பொருட்கள் தாராளமாக நடமாடுகிறது” என்று கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.  முக்கிய கோரிக்கைகள்  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது:  1.    பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடு மைகள் குறித்து விவாதிக்க சிறப்பு சட்ட மன்ற அமர்வு கூட்ட வேண்டும்  2. பெண்களைப் பாதுகாக்கின்ற சட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும்  3. சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்  4. கல்வி நிலையங்கள் மற்றும் பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டும்  5.    பள்ளி, கல்லூரிகளில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் பாடத்திட்டம் கொண்டு வர வேண்டும்   6.    சாட்சிகளை பாதுகாப்பதற்கான சிறப்பு சட்டங்கள் இயற்ற வேண்டும்  7.    குற்றவாளிகளை பாதுகாக்கும் காவல்துறை, அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்  போதை எதிர்ப்பு நடவடிக்கைகள்  தமிழகத்தில் அதிகரித்து வரும் போதை கலாச்சாரத்தை போர்க்கால அடிப்படையில் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாக  குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப் பட்டுள்ளது.  பாலின பட்ஜெட் மற்றும் கொள்கை அமலாக்கம்  தமிழக அரசு கொண்டு வந்த பெண்களுக் கான கொள்கையை தாமதமின்றி முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும், தமிழக பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பாலின பட்ஜெட்டை உருவாக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.  நிர்பயா பாதுகாப்பு மையங்கள் மற்றும் உள்புகார் கமிட்டி  அனைத்து அரசு மற்றும் தனியார் நிறு வனங்களிலும் உள்புகார் கமிட்டி அமைக்கப் பட்டிருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும், பெண்களை பாதுகாக்கும் நிர்பயா  பாதுகாப்பு மையங்களை (One Stop Centres) முறையாக செயல்படுத்த வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.  குழந்தைகள் நல ஆணையம் மற்றும் சிசிடிவி கேமராக்கள்  தமிழகத்தில் குழந்தைகள்நல ஆணை யத்தின் தலைவரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்றும், குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்துவதற்கான தீவிர நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும் என்றும், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் சிசிடிவிகேமராக்கள் பொருத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.  நீதிமன்றங்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்  தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க போக்சோ நீதிமன்றங்கள், மகிளா நீதிமன்றங்கள், எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.