ஒவ்வொரு ஆண்டும் 8,00,000-க்கும் அதிக மானோர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஒவ்வொரு 40 வினாடிக்கும் ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 2012-ஆம் ஆண்டில் உலகிலேயே அதிக தற்கொலை விகிதம் கயானாவில் (44.2) இருந்தது, அதைத் தொடர்ந்து தென் கொரியா (281), மற்றும் இலங்கை (28.8) உள்ளன. உலக சுகாதார நிறு வனத்தின் புள்ளிவிவரங்களின்படி மிகக் குறைந்த தற்கொலை விகிதம் சவூதி அரேபியா, குவைத், சிரியா மற்றும் லெபனானில் இருந்தது குறிப்பிடத்தக்கது, அங்கு தற்கொலை விகிதம் 1,00,000 பேருக்கு 1-க்கும் குறைவாக உள்ளது என்கிறார் அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழக உளவியல் துறை ஆலோசர் ஷியா சாகர். (2023 மார்ச் 15) ஆனால், இந்தியாவில் பெண்களின் தற்கொலை விகிதம் அதிகரித்துள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை தற்கொலை செய்து கொள்ளும் பெண்களில் குடும்பத் தலைவிகளின் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
ஒன்பது நிமிடங்களுக்கு ஒரு பெண் தற்கொலை
ஒவ்வொரு ஒன்பது நிமிடங்களுக்கும் ஒரு பெண் தற்கொலை செய்து கொள்கிறார் என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது தேசிய குற்ற ஆவணக் காப்பகம். கடந்த 2021-ஆம் ஆண்டில் இந்தியாவில் 45,026 பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலை செய்து கொண்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அதாவது 23,178 பேர் குடும்பத் தலைவிகள். 2021-ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 63 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் 2020-ஆம் ஆண்டில் பெண்களை விட அதிகமான ஆண்கள் (1,18,979) தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இருப்பினும் 18 வயதிற்குட்பட்டவர்களில் ஆண்களைவிட பெண்களே அதிகளவில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2021-ஆம் ஆண்டில் நாட்டில் மொத்தம் 1,64,033 தற்கொலைகள் பதிவாகியுள்ளன. இது 2020- உடன் ஒப்பிடுகையில் 7.2 சதவீதம் அதிகம். 2020-ஆம் ஆண்டு 44,498 பெண்களும் 2021-ஆம் ஆண்டு 45,026 பெண்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த இறப்புகளில் குடும்பத் தலைவிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். 2021- இல் நிகழ்ந்த மொத்த தற்கொலைகளில் 14.13 சதவீதம் பேர் தினசரி ஊதியத்தை விட சற்று அதிகம் சம்பாதிப்பவர்கள். 1,503 பேர் வரதட்சணை காரணமாகவும், 217 பேர் விவாகரத்து காரணமாகவும் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். 2,757 பெண்கள் திருமணப் பிரச்சனைகளால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் 30 வயதிற்குட்பட்டவர்கள். 15 வயது முதல் 39 வயது வரையிலானவர்களின் உலகளாவிய தற்கொலைகளில் இந்தியப் பெண்கள் 36 சதவீதம் உள்ளனர். 2020-ஆம் ஆண்டு இந்தியாவில் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகள் 6,004 பேரும் 2021-ஆம் ஆண்டில் 5,655 சிறுமிகளும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். பெண்களின் தற்கொலையில் குடும்பப் பிரச்சனை கள், காதல் விவகாரங்கள், தேர்வில் தோல்வி, திரு மணப் பிரச்சனைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
கடந்த 8 ஆண்டுகளில் குடும்பத் தலைவிகள் தற்கொலை செய்து கொள்வது 50 சதவீதத்தை தாண்டி உள்ளது.
2014 42,521 47.4%
2015 42,088 53.0%
2016 41,997 51%
2017 40,852 52.5%
2018 42,391 54.1%
2019 41,493 51.5%
2020 44,498 50.3%
2021 45,026 51.5%
2021 தற்கொலைக்கான காரணங்கள்
குடும்பப் பிரச்சனைகள்: 15,769
நோய்: 9,426
திருமணம் தொடர்பான சிக்கல்கள்: 4,069
தேர்வில் தோல்வி: 682
காதல் விவகாரம்: 2,894
ஆண்மையின்மை/மலட்டுத்தன்மை: 222
திவால்/கடன்: 482
பல்வேறு வருமான நிலைகளில் 2021-ஆண்டு நிகழ்ந்த தற்கொலைகள்
ரூ.1 லட்சத்திற்கும் குறைவாக: 32,397
ரூ. 1-5 லட்சம்: 10,973
ரூ. 5-10 லட்சம்: 1,234
10 லட்சத்துக்கு மேல்: 422
2021- தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கை
குடும்பப் பெண்கள்: 23,178
மாணவர்கள்: 5,693
சம்பளம் பெறும் பெண்கள்: 1,752
தினசரி ஊதியம் பெறுவோர்: 4,246
விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ள பெண்கள்: 653
சுயதொழில் செய்பவர்கள்: 1,426
காரணம் என்ன?
றக்கட்டளையின் பேராசிரியர் ராக்கி தண்டோனா, “பெண் கல்வி, பணப் பிரச்சனை மற்றும் அவர்கள் விரும்பும் அளவிற்கு இன்னும் அதிகாரம் பெறாதது, பாலினப் பாகுபாடு ஆகியவை தற்கொலைக்கான காரணங்களாக உள்ளன. பெண்கள் குடும்பத் தலைவிகளாக மாறும்போது தான் பெரும்பாலான தற்கொலைகள் நிகழ்கின்றன.” என்கிறார். மேலும் அவர் கூறுகையில், பெண்கள் பொருளாதார ரீதியாக வலுவடையும்போது தற்கொலை களின் எண்ணிக்கை குறைகிறது என்கிறார். இந்தியாவில், நிகழும் தற்கொலைகளுக்கு மனநலப் பிரச்சனைகள் காரணமல்ல. சமூகப் பாதுகாப்பின்மை, வறுமை, வேலையின்மை தான் காரணம் என்கிறார் குழந்தைகள் நல மருத்துவரும் ஜன்ஸ்வஸ்த்யா சஹ்யோக் நிறுவனருமான டாக்டர் யோகேஷ் ஜெயின். தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் சமீபத்திய அறிக்கை, பெண்களின் மனம், உடல் ஆரோக்கியம் மற்றும் சமூக நிலையில் ஏற்பட்டுள்ள மோசமான போக்குகளே காரணம் என்கிறது.
- தொகுப்பு : சௌமி