tamilnadu

img

கொரோனாவுக்கு பிறகு புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு

சென்னை,ஜூன் 17- கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு தமிழகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது கண்டறி யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்  வெளியாகி உள்ளது. இதில் குழந்தை கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள தாக கூறப்படுகிறது. பெரும்பாலான குழந்தைகள் ரத்தப்புற்றுநோயால் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் சென்னை எழும் பூர் குழந்தைகள் நல மருத்துவமனை யில் கடந்த 2018 ஆம் ஆண்டு 90  குழந்தைகளும், 2019 இல் 100 குழந்தை களும், 2020- இல் 115 குழந்தைக ளும், 2021 இல் 140 குழந்தைகளும் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நடப்பு ஆண்டு ஜூன்  மாதம் வரையில் மட்டும் அதிகபட்ச மாக 157 குழந்தைகள் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுள்ளனர். குறிப்பாக இவர்களில் 1-10 வயது குழந்தைகள் அனைவரும் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள். இதேபோல புற்றுநோயால் பாதிக்கப்படும் பெரியவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

அதிகரிப்பு

தமிழகத்தில் கடந்த 2017 முதல் ஒவ்வோர் ஆண்டும் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 0.1 விழுக்காடு அதிகரித்து வருவதாக வும், தற்போதைய சூழலில் மருத்து வமனைகளில் புற்றுநோய் பரிசோத னையை அதிகப்படுத்தி இருப்பதால், கடந்த ஆண்டைவிட நடப்பு ஆண்டில்  புற்றுநோய் பாதிப்பு உயர வாய்ப்பு உள்ளது எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல, சென்னை ராயப் பேட்டை அரசு மருத்துவமனைக்கு புற்றுநோய் சிகிச்சைக்கு வரும் 100 பேரில் மார்பகப் புற்றுநோய் பாதிப்பு 26 விழுக்காட்டிற்கும் அதிகமாக வும், காது மற்றும் கழுத்து பகுதிகளில் வரும் புற்றுநோய் 20-25 விழுக்காடா கவும், கர்ப்பப்பை மற்றும் நுரையீரல் புற்றுநோய் தலா 10-15 விழுக்காடாக வும் அதிகரித்துள்ளதாக ராயப் பேட்டை அரசு மருத்துவமனை புற்று நோயியல் துறை தலைவர் மருத்துவர் சரவணன் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:- கொரோனாவுக்கு பிறகு புற்றுநோய்க்காக சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனா காலத்தில் காய்ச்சல், சளி,  வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறி கள் தென்படும்போது உடனடியாக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என அரசு விழிப்புணர்வை ஏற்படுத்தியதே இதற்கு காரணம்.

பரிசோதனை அவசியம்

அறிகுறிகளுடன் வருபவர்களை பரிசோதிக்கும்போது அவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பும் கண்டறியப் படுகிறது. தற்போது புற்றுநோய் பரிசோ தனை அதிகஅளவில் செய்யப்படுவ தால் மட்டுமே எண்ணிக்கை உயர்ந்து காணப்படுகிறது. பொதுமக்கள் ஆரம்ப நிலையிலேயே புற்றுநோய் பரிசோதனை செய்து கொண்டு அதை கண்டறிந்தால், முதல் நிலையி லேயே குணப்படுத்திவிட முடியும். இவ்வாறு அவர் கூறினார்.