சென்னை, ஜூலை 22- முதியோர், கைம்பெண்கள், ஆதர வற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகையை உயர்த்த தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ் நாடு அமைச்சரவைக் கூட்டம் சனிக்கிழமை யன்று (ஜூலை 22) நடைபெற்றது. அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முக்கியத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது. தமிழ் நாடு அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் நிதி யமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர் களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: முதியோர், கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்டோர், ஆதரவற்றோருக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1,000-லிருந்து ரூ.1,200ஆக உயர்த்தி வழங்க கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மாற்றுத்திறனாளி களுக்கான ஓய்வூதியம் ரூ. 1000-லிருந்து ரூ.1500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர ஓய்வூதியத் தொகை திட்டம் மூலம் 30.55 லட்சம் பேர் பயன் பெறுவர். பல்வேறு வரையறையின் கீழ் ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்துள்ள 74 ஆயிரம் பேரில் தகுதியானவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப் படும். உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ள முதிய வர்களுக்கான ஓய்வூதியம் அடுத்த மாதம் முதல் வழங்கப்படும். முதியவர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்பட்டதன் மூலம் அரசுக்கு ரூ.845 கோடி கூடுதலாக செலவாகும். பல்வேறு நல வாரியங்கள் சார்பில் முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கு தற்போதைய அறிவிப்பு பொருந்தும். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட முகாம்கள் திங்கட்கிழமை (ஜூலை 24) முதல் நடைபெற உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இது வரை 50 லட்சம் மகளிருக்கு விண்ணப்பங் கள் வழங்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 21,000 முகாம்கள் மூலம் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன என்று தெரிவித்தார்.