tamilnadu

img

வாவுபலி பொருட்காட்சி துவக்கம்

குழித்துறை, ஜுலை 14- குழித்துறையில் 97வது  வாவுபலி பொருட்காட்சி துவங்கியது. ஆடி அமா வாசையை முன்னிட்டு குழித்துறை நகராட்சியால் நடத்தப்படும் 97ஆவது வாவு பலி பொருட்காட்சியை புதன் அன்று நகர்மன்றத் தலைவர் ஆசைத்தம்பி திறந்து வைத்தார். கடந்த இரண்டு ஆண்டு களாக கொரோனா காரண மாக வாவுபலி பொருட் காட்சி  நடைபெறவில்லை. தற்போது கொரோனா கட்டுப்பாட்டுக்குள் உள்ள தால் இவ்வாண்டு  வாவுபலி பொருட்காட்சி மிகச் சிறப் பாக துவங்கியுள்ளது. ஆணையாளர் ராமத்தில கம், நகராட்சி பொறியாளர் பேரின்பம் ஆகியோர் முன் ்னிலை வகித்தனர். துணைத் தலைவர் பிரவீன்  ராஜா, சுகாதார அலு வலர் ஸ்டாலின் குமார், வேளாண்மை இணை இயக் குநர் அவ்வை மீனாட்சி, உதவி இயக்குநர் சந்திர போஸ், நகர்மன்ற உறுப்பி னர்கள் லலிதா, சர்தார் ஷா, விஜயலட்சுமி, ஜூலியட் மெர்லின் ரூத், ஜெலிலா ராணி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள்,  பொது மக்கள், அரசு அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.