tamilnadu

img

சென்னை, ஆவடி, தாம்பரம் மாநகராட்சி சிபிஎம் கவுன்சிலர்கள் பதவியேற்பு

பெருநகர சென்னை மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பதவியேற்பு விழா புதனன்று (மார்ச் 2) ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெற்றி பெற்ற ஆர். ஜெயராமன் (4), ப.விமலா (41), ஆ.பிரியதர்ஷினி (98), எம்.சரஸ்வதி (123) ஆகியோர் மாமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இதேபோன்று தாம்பரம் நகராட்சியில் 28ஆவது வட்ட மாமன்ற உறுப்பினராக ஜி.விஜயலட்சுமியும், ஆவடி மாநகராட்சி 10ஆவது வட்ட மாமன்ற உறுப்பினராக ஆ.ஜானும் பதவியேற்றுக் கொண்டனர்.

நகராட்சி, பேரூராட்சி சிபிஎம் கவுன்சிலர்கள் பதவியேற்பு