tamilnadu

img

தமிழகத்திலேயே முதன்முறையாக தஞ்சை மருத்துவக் கல்லூரியில் குப்பையை பவுடராக்கும் நவீன கருவி திறப்பு

தஞ்சாவூர், ஜூலை 18 -  தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் மக்கும் குப்பை களை பவுடராக்கும் நவீன கருவி அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் இராசா மிராசுதார் மருத்துவமனைகளில் நாள் தோறும் சுமார் இரண்டரை டன் குப்பைகள் சேகரமாகிறது. இந்த குப்பைகள் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் குவித்து வைக்கப்பட்டதால் மலைபோல் தேங்கியது. இத னால் சுகாதாரச் சீர்கேடும், சுற்றுச் சூழல் மாசும் ஏற்பட்டதைய டுத்து, இந்த குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பைகள் நவீன இயந்திரத்தின் மூலம் பவுடராக மாற்றும் நவீன கருவி அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்புடன் ரூ.1 கோடி நிதி யில் நவீன கருவி அமைக்கப்பட் டது. இதனை ஞாயிறன்று பயன் பாட்டுக்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜி.ரவிக்குமார் தலைமை வகித்தார்.

பின்னர் செய்தியாளர்களி டம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறு கையில்,  முன்னாள் மருத்துவ மாண வர்கள் சங்கம் சார்பில் ரூ.75 லட்சமும், மாவட்ட நிர்வாகம் மற்றும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சார்பில் ரூ.25 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த கருவி மூலம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மற்றும் இராசா மிராசுதார் மருத்துவ மனையில் சேகரிக்கப்படும் திடக் கழிவுகள் அனைத்தும், 300 முதல் 450 டிகிரி வெப்பத்தின் உதவியு டன் வெப்ப சிதைவு முறை மூலம் சாம்பலாக்கப்படும். இதில் எரிபொருள் கிடையாது. வெப்ப உலை கிடையாது. புகை வராது. சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாது. தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி வளா கத்தில், திடக் கழிவு பொருட் களை சுத்திகரிக்கும் நவீன கருவி அமைக்கப்பட்டு பயன் பாட்டுக்கு வந்துள்ளது. இந்த சுத்திகரிப்பு நவீன கருவி 24 மணி நேரமும் செயல்படும். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு திடக் கழிவு 1,200 கிலோ முதல் 1,500 கிலோ வரை அளிக்கப்பட்டு, சுத்தமான பயன்பெறும் சாம்பலை பவுடராக பெற முடியும். இது தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கருவி யாகும். இதன் மூலம் சுற்றுச் சூழல் மாசுபடுவதை தவிர்த்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வழிவகுக்கும்” என்றார்.