புதுதில்லி, ஜூலை 26 - எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு வழக்கை, உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ஆட்சிக்காலத்தில் நெருங்கிய உறவினர்களுக்கு ரூ. 4,833 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை த்துறை ஒப்பந்தங்களை வழங்கி முறை கேட்டில் ஈடுபட்டதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தார். இந்த வழக்கில் 2018 அக்டோபரில் தீர்ப்பளித்த நீதிபதி ஜெகதீஸ் சக்ரா, வழக்கை சிபிஐ-க்கு மாற்றியதோடு ஆரம்பக்கட்ட விசாரணையை 3 மாத காலத்துக்குள் முடிக்குமாறு உத்தர விட்டார். ஆனால், இந்த உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத் தில் மேல்முறையீடு செய்தார். தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையமும் மேல்முறையீடு செய்தது. எடப்பாடி பழனிசாமியின் மனுவை விசாரித்த நீதிபதிகள், கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பர் 29-ஆம் தேதி சிபிஐ விசார ணைக்கு இடைக்காலத் தடைவிதித்தனர். கடந்த 4 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரிக்கப்படவில்லை.
இதனிடையே, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன்பு ஆஜரான தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்தின் வழக்கறி ஞர் ரஞ்சித்குமார், ‘எடப்பாடி பழனி சாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த முறைகேடு வழக்கில், தாங்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும்’ என கேட்டுக்கொண்டார். இந்த முறையீட்டை பரிசீலித்த நீதிபதிகள், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஜூன் 26 நடைபெறும் என்று தெரிவித்தனர். அதன்படி செவ்வாய்க்கிழமையன்று இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரமணா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்.எஸ். பாரதி சார்பில் அவகாசம் கோரப்பட்டதால், வழக்கை ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.