tamilnadu

ஆன்-லைன் விளையாட்டுக்களில் சிறுவர்கள் பங்கேற்க தடை

சென்னை, பிப்.9 - தமிழ்நாட்டில் ஆன்-லைன் சூதாட்டங்கள் காரண மாக ஏற்படும் பண இழப்பு மற்றும் தற்கொலைகளைத் தடுக்கும் நோக்கில், தமிழ்நாடு ஆன்-லைன் கேமிங் ஆணையம் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி நசிமுதீன் தலைமை யிலான ஆணையம் வெளியிட்டுள்ள முக்கிய விதிமுறை களில், 18 வயதுக்குட்பட்டவர்கள் பணம் கட்டி விளை யாட முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் எச்சரிக்கை செய்தி கட்டா யம் தெரிவிக்கப்பட வேண்டும், நள்ளிரவு முதல் காலை  5 மணி வரை விளையாட தடை, ஆதார் அட்டை சரி பார்ப்பு கட்டாயம், விளையாட்டுத் தளங்களில் தொடர் எச்சரிக்கை அறிவிப்புகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப விதி களின்படி, பணம் அல்லது பொருள் முதலீட்டின் மூலம் வெற்றி பெறும் விளையாட்டுகளே ‘ஆன்-லைன் பண விளையாட்டுகள்’ என வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த  புதிய விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.